ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டியை மீட்டெடுப்பதற்காக இளைஞர்களும், மாணவர்களும் ஆரம்பித்து வைத்த போராட்டத்திற்கு தமிழ் மக்களும் ஆதரவு அளித்தனர். போராட்டத்திற்கு பெருகிய ஆதரவைப் பார்த்து தமிழ் நடிகர்கள் பலரும் தாமாகவே முன் வந்து ஆதரவு அளித்தார்கள். அதோடு, தென்னிந்திய நடிகர் சங்கமும் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக மௌனப் போராட்டம் நடத்தினார்கள்.
இதனிடையே, வரும் 26ம் தேதி ஆந்திரா மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் தங்களது மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி, விசாகப்பட்டிணம் கடற்கரையில் போராட்டத்திற்கு சமூக வலைத்தளங்களில் அழைப்பு விடுத்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டம் சென்னை மெரீனா கடற்கரையில்தான் ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டத்திற்கு பவன்கல்யாண் ஆதரவு அளித்து விளக்கமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். ஜல்லிக்கட்டு போராட்டம்தான் இப்போது ஆந்திர இளைஞர்களுக்கு முன் மாதிரியாக அமைந்துள்ளது.
இளைஞர்களின் போராட்ட அழைப்புக்கு தெலுங்கு நடிகரான பவன் கல்யாண் நேற்று தன்னுடைய பகிரங்க ஆதரவைத் தெரிவித்துள்ளார். “ஆந்திர இளைஞர்கள் அறவழியில் போராடினால் மட்டும்தான் சிறப்பு அந்தஸ்து கிடைக்க வழி வகுக்கும்,” என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த போராட்டத்திற்காக அவரது கட்சி சார்பாக ஒரு பிரச்சசாரப் பாடலையும் வெளியிட உள்ளார்.
பவன்கல்யாண் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து மேலும் பல இளம் நடிகர்களும் ஆந்திர இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர்.