ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் நாளுக்கு நாள் உக்கிரமாகி கொண்டு இருக்கிறது. திரையுலக நட்சத்திரங்கள் பலரும் ஜல்லிக்கட்டுக்கும் அதற்கான இளைஞர்கள் போராட்டத்துக்கும் தங்களது ஆதரவை வெளிப்படையாக அறிவித்து வருகின்றனர்.. இதில் என்ன ஆச்சர்யம் என்றால் வெளி மாநிலங்களில் இருந்து இங்கு வந்து நடித்து சம்பாதிக்கும் பல நடிகர் நடிகைகள் ஜல்லிக்கட்டு குறித்து வாய்திறக்காத நிலையில் தமிழ்ப்படங்கள் எதிலுமே நடித்திராத மலையாள காமெடி நடிகர் அஜூ வர்கீஸ் ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவில் கிட்டத்தட்ட சந்தானம் ரேஞ்சுக்கு முன்னணி காமெடியனாக உள்ள இவர் இது குறித்து கூறியுள்ளதாவது, “ஒரு மாநிலத்திற்கும் முழுமையான கலாச்சாரத்தை அவமதிப்பது என்பது நல்லதல்ல.. தமிழ்நாட்டு இளைஞர்களின் ஒற்றுமையான போராட்டம் உலகத்தாரையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. அவர்களது போராட்டம் வெற்றியடையாவும் அவர்களுக்கு நல்லதொரு நீதி கிடைக்கவும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய பேஸ்புக் டைம்லைன் முழுவதும் தமிழ் சகோதரர்களின் ஜல்லிக்கட்டு வேண்டும்' என்கிற கோஷத்தால் நிரம்பி வழிகிறது.. அதனால் நானும் ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுக்கிறேன்” என ஆதரவு வார்த்தைகளை கூறியுள்ளார்..
கடந்தமாதம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு இனம், மொழிகளை கடந்து நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பலர் தங்களது அஞ்சலியையும் இரங்கலையும் செலுத்தினார்கள். அப்படிப்பட்டவர்களில் இந்த அஜூ வர்கீஸும் ஒருவர்.. மற்றவர்கள் எல்லாம் வெறும் இரங்கல் செய்தியை மட்டுமே பதிவிட்ட நிலையில் இவர் அப்போதும் ஆச்சர்யமான காரியம் ஒன்றை செய்தார்.. தமிழர்களை அவ்வப்போது கிண்டலடிக்கும் மலையாளிகளை விளாசும் விதமாக சாட்டையடி வார்த்தைகளை கூறி இருந்தார். “ஜெயலலிதாவின் மறைவால் தமிழக மக்கள் கட்டுப்படுத்த இயலாமல் கதறி அழுகிறார்கள் என்றால், டிவியில் தங்களது முகம் தெரிவதற்காக அல்ல.. அவர் மீது அவர்கள் வைத்துள்ள அன்பும் மரியாதையும் தான் காரணம். முதலில் நாம் சரியாக இருக்கிறோமா என்பதை பார்ப்போம்.. தமிழர்கள் தங்கள் தலைவர்களுக்காக நாள் முழுவதும் அழுது தீர்ப்பதால் அவர்கள் முட்டாள்களும் அல்ல, நாம் இரண்டு நிமிட அஞ்சலியுடன் முடித்துக்கொள்வதால் அறிவாளிகளும் அல்ல.. நாம் நம் தலைவர்களை டிவிக்களில் மட்டுமே பார்க்கிறோம்.. அங்கோ அவர்கள் ஜெயலலிதாவை தங்களது குடும்பத்தினராகவே பார்க்கிறார்கள்” என அஜு வர்கீஸ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
ஒரு மலையாள நடிகர் தமிழர்களின் பார்வையில் இருந்து சிந்திப்பதும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதும் ஆரோக்கியமான விஷயம் என்பதில் ஐயமில்லை.