ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த ஒரு மாத காலமாக கேரளாவில் தியேட்டர் அதிபர்கள் நடத்திய ஸ்ட்ரைக்கையும் அதனால் மலையாள சினிமா ஸ்தம்பித்ததையும் பற்றி அவ்வப்போது விலாவாரியாக கூறி வந்துள்ளோம்.. இந்தப்பிரச்சனையில் கேரள முதல்வர் பிணராயி விஜயன் தலையிட்டு விசாரணை கமிஷன் அமைப்பதாக கூறிய பின்னர் தியேட்டர் அதிபர்கள் கூட்டமைப்பு சமீபத்தில் ஸ்ட்ரைக்கை வாபஸ் பெற்றது.. இதனால் நாளை முதல் கேரளாவில் புதிய படங்கள் வெளியாக இருக்கின்றன. ஆனால் இந்த ஸ்ட்ரைக்கில் கலந்துகொண்ட பெரும்பான்மையான கேரள தியேட்டர்காரர்களுக்கு புதிய சிக்கல் ஒன்று காத்திருக்கிறது..
ஆம்.. இந்த ஸ்ட்ரைக் உச்சகட்டத்தில் இருக்கும்போதே, ஒருவேளை இது தற்போதைக்கு ஏதோ ஒரு விதத்தில் முடிவுக்கு வந்தாலும் இனி எதிர்காலத்தில் தொடரக்கூடாது என யோசிக்க ஆரம்பித்தார் நடிகர் திலீப்.. காரணம் அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, தயாரிப்பாளரும், தியேட்டர் அதிபரும் கூட. அதனால் இரண்டு தரப்பினரின் உண்மையான கஷ்ட நஷ்டங்கள் அவருக்கு தெரியும்.. ஆகவே இந்த போராட்டத்துக்கு காரணகர்த்தாவாக விளங்கிய கேரள தியேட்டர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவரான லிபர்ட்டி பஷீரின் கொட்டத்தை அடக்கும் விதமாக புதிய கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார்..
திலீப்பின் இந்த அதிரடி நடவடிக்கையின் பின்னணியில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் மோகன்லாலின் வலதுகையாக விளங்கும் ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் மம்முட்டியின் வலதுகையாக அறியப்படும் ஆண்டோ ஜோசப் என்கிற இரண்டு தயாரிப்பாளர்கள் தான். அவர்கள் தான் இந்த ஸ்ட்ரைக்கை விரும்பாத, லிபர்ட்டி பஷீரின் சுயநல போக்கை விரும்பாத தியேட்டர் அதிபர்களை ஒன்றிணைத்து புதிய சங்கம் ஆரம்பமாக காரணமாக இருந்தவர்கள்.. அதன்படி இனி ரிலீஸாக இருக்கும் புதிய சினிமாக்கள் லிபர்ட்டி பஷீரின் ஆதரவளர்களாக கருதப்படும் சில தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய கொடுக்கப்பட மாட்டாது என்றே தெரிகிறது.. இந்த ஸ்ட்ரைக்கை வாபஸ் வாங்கியபின்னும் தியேட்டர் அதிபர்களை திலீப் மிரட்டுகிறார் என லிபர்டி பஷீர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் திலீப்போ, இந்த பிரச்சனையால் கடந்த ஒரு மாதமாக மனம் நொந்து போயிருந்த தயாரிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட சில தியேட்டர்களில் தங்கள் படம் வெளியாவதை விரும்பவில்லை என கூறிவிட்டார்கள் என்றும், அதனால் அது அவர்கள் முடிவே தவிர, தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறி ஒதுங்கிக்கொண்டார்.. ஏண்டா இந்த ஸ்ட்ரைக்கை ஆரம்பித்தோம் என, தற்போது ஆப்பசைத்த குரங்கின் நிலையில் தனது முக்கியத்துவத்தை இழந்து நிற்கிறார் லிபர்ட்டி பஷீர்