ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த வருட ஆரம்பத்தில் மலையாளத்தில் வெளியான 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை ருசித்த பஹத் பாசில், மீண்டும் அந்தப்படத்தின் இயக்குனர் திலீஷ் போத்தன் டைரக்சனில் இன்னொரு படத்தில் நடித்து வருகிறார். படத்தின் பெயர் 'தொண்டிமுதலும் திரிக்சாட்சியும்'.. இந்தப்படத்தில் ஸ்பெஷல் அம்சமாக கேரளாவை சேர்ந்த 23 நிஜ போலீஸ்காரர்கள் நடித்து வருகின்றனர். இதற்காக நடத்தப்பட்ட ஆடிசனில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் கலந்துகொண்டார்களாம். சீரியஸாக காட்சியளிக்கும் பல போலீஸ்காரர்களுக்குள் இப்படி ஒரு நடிகன் ஒளிந்திருக்கிறானா என ஆச்சர்யப்பட்டுப்போன இயக்குனர் திலீஷ் போத்தன், அவர்களில் கதைக்கு தேவைப்படும் 23 பேரை மட்டும் தேர்வு செய்தாராம்..
23 போலீஸ்காரர்கள் என்பதால் ஏதோ ஒரு காட்சியில் மொத்தமாக தலைகாட்டிவிட்டு வந்த சுவடு கூட தெரியாமல் போய்விடுவார்கள் என நினைக்கவேண்டாம். இவர்கள் அனைவருக்குமே படத்தில் அதிகப்படியான காட்சிகள் இருக்கின்றனவாம். குறிப்பாக இதில் நான்கைந்து போலீஸ்காரர்களுக்கு படம் முழுவதும் பயணிக்கும் வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம். தங்களது நடிப்பால் பஹத் பாசிலையும் ரொம்பவே கவர்ந்துவிட்டார்களாம் இந்த போலீஸ்காரர்கள் அனைவரும்.