ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டாரான ராம் சரண் வழக்கமான ஸ்டையிலிஷ் ஹீரோவாக அல்லாமல் தனது அடுத்த படத்தில் கிராமத்து நாயகனாக நடிக்கவுள்ளார் என ஏற்கனவே கூறப்பட்டது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகவிருக்கும் அப்படத்தில் ராம் சரண் காதுகேட்பதில் குறைபாடு உடையவராக நடிக்கின்றார். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இதனை அனுபமா சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தார். தற்போது டோலிவுட்டில் வளர்ந்து வரும் ஹிந்தி நடிகை ராக்ஷி கண்ணாவும் இப்படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இரு நாயகிகளுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்திருப்பதாக சுகுமார் கூறியுள்ளார். இப்படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவுள்ள நிலையில் படப்பிடிப்புகளை பிப்ரவரியில் துவங்க படக்குழு முடிவு செய்துள்ளது.