விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான 'கட்டப்பனயிலே ரித்விக் ரோஷன்' என்கிற படத்தில் ஹீரோவின் நண்பராக காமெடி நடிகராக படம் முழுவதும் கலக்கியவர் தர்மஜன் போல்காட்டி.. இவர் சின்னத்திரை காமெடி ஷோ நிகழ்ச்சியில் இருந்து, வெள்ளித்திரைக்கு தாவி, படிபடியாக சின்னசின்ன வேடங்களில் நடித்து இன்று அனைத்து ரசிகர்களாலும் கவனிக்கப்படும் நிலைக்கு வந்திருக்கிறார்.. இவரது சினிமா அறிமுகம் திலீப் நடித்த 'பாப்பி அப்பச்சா' என்கிற படத்தின் மூலம் நிகழ்ந்தது..
அந்தப்படத்தில் திலீப்பின் கார் ட்ரைவர் வேடம் இவருக்கு தரப்பட்டு இருந்தது.. படப்பிடிப்பின் முதல் நாள் எல்லோருக்கும் முதல் ஆளாக வந்துவிட்டாராம் தர்மஜன்.. ஆனால் திலீப்புடன் இவர் நடிக்கும் காட்சியை படமாக்க கொஞ்ச நேரம் ஆகும் என கூறிவிட்டதால், முதல் நாள் நடிக்கப்போகும் டென்ஷனுடன் இருந்த தர்மஜனுக்கு தூக்கம் வர ஆரம்பித்துவிட்டதாம். அப்போது அங்கிருந்த புரொடக்சன் பாய் ஒருவர் அருகில் திலீப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்த கேரவனை காட்டி அதில் தூங்க சொன்னாராம்.
கேரவன் பற்றி அறியாத தர்மஜனும் அதில் சென்று தூங்கிவிட திலீப் நடிக்கும் காட்சியில் அவரை தேடியுள்ளார்கள்.. ஆள் கிடைக்காமல் போகவே, முதல் நாள் ஷூட்டிங் பயத்தில் எங்காவது போயிருப்பான் அழைத்துக்கொண்டு வாருங்கள்.. நான் அதுவரை கேரவனில் இருக்கிறேன் என கூறிய திலீப், கேரவனுக்குள் நுழைய அங்கே தூங்கிக்கொண்டு இருந்த தர்மஜனை பார்த்து ஷாக் ஆனாராம். தன்னை திலீப்பே வந்து எழுப்பியது கண்டு தர்மஜ்ன மிரண்டுபோய், கேரவன் பற்றி தெரியாமல் உறங்கிவிட்டேன் என அழாத குறையாக மன்னிப்பு கேட்க, அதை பெருந்தன்மையாக ஒதுக்கிய திலீப் அவருக்கு தைரியம் கொடுத்து தன்னுடன் நடிக்க வைத்தாராம். அதன்பின் சமீபத்தில் நடைபெற்ற திலீப்-காவ்யா மாதவன் திருமணத்தில் கலந்துகொண்ட சிறப்பு அழைப்பாளர்களில் இவரும் ஒருவராக ஆகும் அளவுக்கு திலீப்புடன் நெருங்கிய நண்பராகிவிட்டார். மேலே உள்ள புகைப்படத்தில் செல்பி எடுக்கிறாரே அவர்தான் இவர்.