ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் பா.விஜய், சினேகன் போன்ற பாடலாசிரியர்கள் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், தற்போது பல படங்களில் பாடல்கள் எழுதியுள்ள ஜெயங்கொண்டானும் சில படங்களில் நடிகராக ஒப்பந்தமாகியிருக்கிறார். ஏற்கனவே ரத்னசிவா இயக்கத்தில் விஜயசேதுபதி நடித்து வெளியான றெக்க படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்துள்ள அவர், தற்போது பன்னீர் செல்வம், பொன்ராம், விஜயசந்தர், ராஜா ஆகியோர் இயக்கும் படங்களில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.
மேலும், இப்போது நான் வெயிட்டான வேடங்களில் நடிக்கவில்லை, ஹீரோவின் நண்பனாக மற்றும் நான்கு பேரில் ஒருவராகத்தான் நடிக்கிறேன். இப்படி நடித்து நடிப்பில் என்னை வளர்த்து கொண்ட பிறகு வெயிட்டான வேடங்களில் நடிப் பேன். குறிப்பாக, இந்த ஆண்டில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறேன். அதில் என்னுடன் கஞ்சா கருப்புவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அந்த படத்தை ஒரு முன்னணி இயக்குனர் இயக்க உள்ளார் என்கிறார் பாடலாசிரியர் ஜெயங்கொண்டான்.