14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் புதிய படத்திற்கான ஒரு டிக்கெட்டை, ஒரு லட்சம் ரூபாய் விலை கொடுத்து வாங்கிய ரசிகரின் செயல், ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் ஒரு நல்ல விஷயத்திற்காக செய்ததை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தெலுங்கு நடிகரும், ஆந்திர மாநில, எம்.எல்.ஏ.,வுமான, பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி யுள்ள, 100வது படம், கவுதமிபுத்ர சடகர்னி. மாபெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம், 12ல் வெளியானது. அதற்கு முன், ஸ்பெஷல் ஷோ திரையிடப்பட்டது. பாலகிருஷ்ணாவின் தீவிர ரசிகரான கோபிசந்த், ஸ்பெஷல் ஷோவுக்கான டிக்கெட்டை, ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கினார். இது, பாலகிருஷ்ணாவின், 100வது படத்திற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாக கருதப்படுகிறது.
குண்டூர் பகுதியில் ரெஸ்டாரண்ட் நடத்தி வரும் இவர், கடந்த ஒரு ஆண்டாகவே பணம் சேர்த்து வைத்திருந்ததாகவும், கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பது போன்ற தேவையில்லாத காரணத்திற்காக இந்த பணத்தை செலவு செய்ய விரும்பவில்லை.இந்த பணம் நல்ல காரியத்திற்கு பயன்பட வேண்டும் என நினைத்தேன். இந்த தொகையை பாலகிருஷ்ணாவின் படத்தின் வழியாக நல்ல காரியத்திற்கு உபயோகப்படுவது மகிழ்ச்சியாக உள்ளதாக கோபிசந்த் தெரிவித்துள்ளார்.
ஸ்பெஷல் ஷோவில் வசூலான பணம் அனைத்தும், பாலகிருஷ்ணணாவின் தந்தையும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவ் துவக்கிய, புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவமனை அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டு உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தன் தாய் பெயரில் இயங்கி வரும் அந்த அறக்கட்டளை நிர்வாகத்தை, பாலகிருஷ்ணாவே நிர்வகித்து வருகிறார்.