ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சினிமாவில் மோகன்லாலின் மகன் பிரணவும் ஹீரோவாக களம் இறங்கியுள்ளதை இன்னும் பலரால் நம்பவே முடியவில்லை... ஹீரோ ஆவதற்கு அவருக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை என்றாலும், பிரணவ் தந்தையைப்போல நடிப்பதை விரும்பாமல், டைரக்சன் பக்கமே தனது கவனத்தை திருப்பியிருந்தார் என்பது கேரளாவில் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.. தனது முதல் பட டைரக்சன் பற்றி அவர் அறிவிப்பார் என எதிர்பார்த்தால், அவர் நடிக்கும் முதல் படத்தை இயக்குவதாக அவரது குருநாதர் இயக்குனர் ஜீத்து ஜோசப் அறிவித்தது கொஞ்சம் ஷாக்கிங்காகத்தான் இருந்திருக்கும்..
இதன் பின்னணியில் என்ன நடந்தது என்கிற விஷயம் இப்போது வெளியில் கசிந்திருகிறது.. அதாவது பிரணவை மோகன்லாலின் வீட்டில் உள்ளவர்களும், நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களும் நடிப்பில் இறங்கும்படியே வற்புறுத்தினார்களாம்.. மோகன்லால் இந்த விஷயத்தில் தலையிடாமல் மகனே உன் முடிவு என ஒதுங்கி கொண்டாராம். ஆனாலும் தந்தையிடம் சென்ற பிரணவ், இந்த ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன், அதற்கடுத்து எனக்கு விருப்பம் இருந்தால், இந்தப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்துதான் தொடர்ந்து நடிக்கவேண்டுமா என்கிற முடிவை எடுப்பேன் என நிபந்தனை வித்தித்தாராம். அதற்கு அனைவரும் ஒப்புக்கொண்ட பின்னரே அவர் கதாநாயகனாக நடிக்கும் அறிவிப்பு வெளியானதாம்.