ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் 100 படங்களுக்கு மேல் இயக்கி இருக்கிறார். ஆனால் அவர் நடிகர் திலகம் சிவாஜியை இயக்கிய ஒரே படம் எதிரொலி. நவரத்னா பிலிம்ஸ் சார்பில் ஜி.என்.வேலுமணி தயாரித்தார். கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். சிவாஜியுடன் சிவகுமார், எஸ்.எஸ்.ராஜேந்திரன், கே.ஆர்.விஜயா, லட்சுமி, நாகேஷ், மனோரமா நடித்திருந்தனர்.
நேர்மை தவறாத நீதிபதி சிவாஜி எதிர்பாரமல் கிடைக்கும் ஒரு பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விடுகிறார். ஒரு நிமிட மன தடுமாற்றத்தால் மனசாட்சி அவரை சித்ரவதை செய்யும், இதை அறிந்து கொள்ளும் வில்லன் இதை வைத்தே நீதிபதியை பிளாக் மெயில் பண்ணுவான். இந்த பிரச்சினைகளை நீதிபதி எப்படி சமாளிக்கிறார் என்பது கதை.
நேர்மையாளராக நடித்து வந்த சிவாஜி இந்தப் படத்தில் நேர்மை தவறிவராக நடித்தது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் படம் தோல்வி அடைந்தது. 1970ம் ஆண்டு படம் வெளிவந்தது அதன் பிறகு கே.பாலச்சந்தர் சிவாஜியை இயக்கவில்லை. பின்னாளில் உன்னால் முடியும் தம்பி படத்தில் ஜெமினி கணேசன் நடித்த கேரக்டரில் சிவாஜியை நடிக்க வைக்க விரும்பினார். என்ன காரணத்தலோ அதுவும் நடக்கவில்லை.