ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சில வருடங்களுக்கு முன்பே மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும், குளோபல் சூப்பஸ்டார் ஜாக்கிசானும் இணைந்து நடிக்கும் படத்தை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. படத்திற்கு 'நாயர் சான்;' என டைட்டிலும் வைக்கப்பட்டிருந்தது. நாயராக மோகன்லாலும் சான் ஆக ஜக்கிசானும் நடிக்க இருந்தார்கள் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. இந்தப்படத்தை ஆல்பர்ட் ஆண்டனி என்பவர் இயக்குவதாக இருந்தார். சுதந்திர போராட்ட காலத்தில் நடைபெறும் கதையாக இது வடிவமைக்கப்பட்டு இருந்ததாம். இதில் மோகன்லால் படைவீரனாகவும் ஜாக்கிசான் மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுத்தரும் பயிற்சியாளராகவும் நடிக்க இருந்தார்களாம்.
ஆனால் அப்போதைய நிலவரப்படி மோகன்லாலுக்கு ஓவர்சீஸ் மார்க்கெட் வேல்யூ பெரிய அளவில் இல்லாததால் ஆரம்பகட்ட பணிகளுடன் அந்தப்படம் நிறுத்தப்பட்டது.. சொல்லப்போனால் அந்தப்படம் கைவிடப்பட்டதாகவே சொல்லப்பட்டது.. ஆனால் தற்போது 'புலி முருகன்' மற்றும் 'ஜனதா கேரேஜ்' ஆகிய படங்கள் மோகன்லாலின் ஓவர்சீஸ் மார்க்கெட் வேல்யூவை பல மடங்கு உயர்த்திவிட்டன.. அதனால் இந்த சூழல் தான் சரியான நேரம் என மோகன்லால்-ஜாக்கிசான் இணையும் படத்தை மீண்டும் தூசுதட்டி ஆரம்பிக்க முடிவெடுத்துள்ளார்களாம்.