சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை பொறுத்தவரை ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர் என்பது நன்றாகவே தெரியும். முக்கியமான தருணங்களிலும், விசேஷ நாட்களிலும் கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டவர். ஆனால் அவருடைய மகன் பிரணவ் மோகன்லால் ஆன்மீக விஷயத்தில் மோகன்லாலுக்கு அப்படியே நேரெதிரானவராம். கோவிலுக்கு வருமாறு குடும்பத்தினர் அழைத்தால் கூட, ஆளை விடுங்க சாமி என கும்பிடு போட்டு எஸ்கேப் ஆகிவிடுவாராம். மகன் குறித்த இந்த தகவல்களை சமீபத்தில் பகிர்ந்துகொண்ட மோகன்லால் அதற்கான காரணங்களையும் கூறியுள்ளார்.
“நாங்கள் வளர்ந்த காலத்தில் கோவிலுக்கு செல்வதும், பாசுரங்கள் படிப்பதும் எங்களது தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருந்தது. மேலும் அவற்றை கட்டாயம் பின்பற்றும்படி எங்களுக்கு பெரியவர்கள் அறிவுறுத்தினார்கள். ஆனால் பிரணவ் படித்து வளர்ந்தது எல்லாம், சுமார் 23 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் வந்து படிக்கின்ற இன்டர்நேஷனல் பள்ளியில். அங்கே ஆன்மீகத்திற்கான வேலையேது..? நாமாக எதையும் திணிக்கவும் முடியாது. யாராவது ஒருவர் வந்து என் மகனிடம் கடவுளை தினமும் வழிபடு என கூறினால், அப்படி வழிபடுவதால் என்னென்ன பயன்கள் என எதிர் கேள்விகள் கேட்க ஆரம்பித்து விடுவார். அதனால் அவரது நம்பிக்கைகளில் நாங்கள் தலையிடுவது இல்லை” என கூறியுள்ளார் மோகன்லால்.