ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய்சேதுபதி நடித்து பல வருடங்களாக கிடப்பில் கிடந்த மெல்லிசை படம் 'புரியாத புதிர்' என்ற பெயரில் ஜனவரியில் வெளியாக உள்ளது. இந்தப்படத்தில் விஜய்சேதுபதியின் தோற்றமே பல வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட படம் இது என்பதை காட்டிக்கொடுத்துவிடும், அதுவே படத்துக்கு மைனஸாகிவிடும் என்று நினைக்கிறாராம் விஜய்சேதுபதி. எனவே கே.விஆனந்த் இயக்கத்தில் நடித்த 'கவண்' படத்தை முதலில் வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.
இது ஒரு பக்கம் இருக்க, தற்போது, 'வட சென்னை', ' விக்ரம் வேதா' போன்ற படங்களில் நடித்து வரும் விஜய்சேதுபதி அடுத்து 'ரேனிகுண்டா' படத்தை இயக்கிய பன்னீர் செல்வம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு வித்தியாசமான கதாநாயகன் வேடமாம! இந்தப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் பாபி சிம்ஹா. விஜய்சேதுபதி கேரக்டருக்கு ஈடு கொடுக்கும் விதமாக பாபி சிம்ஹாவின் கதாபாத்திரத்தையும் வலுவாக அமைத்திருக்கிறாராம் இயக்குநர்.
கார்த்திக் சுப்பராஜின் 'இறைவி' படத்தில் இணைந்து நடித்த விஜய் சேதுபதியும், பாபி சிம்ஹாவும் மீண்டும் இந்தப்படத்தின் மூலம் இணைகிறார்கள். கதாநாயகனாக நடித்து வந்தாலும் பாபிசிம்ஹாவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. தவிர அவர் ஹீரோவாக நடித்த பாம்புசட்டை உட்பட சில படங்கள் பிசினஸ் ஆகாமல் கிடக்கின்றன. எனவேதான் முன்னணி ஹீரோக்களின் படங்களில் அவ்வப்போது வில்லனாக நடிப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் பாபிசிம்ஹா.