ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த இரண்டு வருடங்களும் நிவின்பாலியின் ராஜ்யம் தான் மலையாள சினிமாவில் கொடிகட்டி பறந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.. இந்த இரண்டு வருடங்களுக்குள் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களின் மனதிலும் நன்கு பதிந்துவிட்டார் நிவின்பாலி.. அதனாலேயே அவரது ஒவ்வொரு படங்களும் வெளியாகும்போதும் எதிர்பார்ப்பு இருமடங்காகியது.. அந்தவகையில் இந்த 2016ஆம் வருடம் நிவின்பாலிக்கு எப்படி அமைந்தது என பார்க்கலாம்.
இந்த வருடம் நிவின்பாலியின் நடிப்பில் இரண்டே இரண்டு படங்கள் வெளியாகின.. ஆனால் இரண்டுமே நூறு நாள் படங்கள் என்பதால் நிவின்பாலியின் கேரியர் கிராப் உயர்ந்திருக்கிறதே தவிர குறையவில்லை. இந்த வருட ஆரம்பத்தில் வெளியான 'ஆக்சன் ஹீரோ பிஜூ' படத்திற்கு வரவேற்பு நன்றாக இருந்தாலும் நிவின்பாலிக்கென உள்ள ரசிகர்களிடம் சற்று மனக்குறையை ஏற்படுத்தவும் தவறவில்லை. காரணம் வழக்கமான போலீஸ் படங்களை போல இல்லாமல் இதனை புதியபாணியில் எடுத்திருந்தார் இயக்குனர் அப்ரிட் ஷைன்.. தான் எதையும் வித்தியாசமாக செய்யக்கூடியவர் என்பதை தனது முதல் படமான '1983' படத்திலேயே காட்டியவர் அப்ரிட் ஷைன்..
போலீஸ் சப் இன்ஸ்பெக்டரான நிவின்பாலி தனது அதிகாரத்திற்கும் உடல் பலத்திற்கும் உட்பட்டு தன்னிடம் தினசரி வரும் வழக்குகளை எப்படி டீல் செய்கிறார் என்பதைகூட கொஞ்சம் விறுவிறுப்பாகத்தான் சொல்லியிருந்தார். அதனால் படம் போகப்போக பிக்கப் ஆகி நூறு நாட்களை கடந்தது.. அடுத்ததாக கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியான படம் 'ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்யம்'.. நிவின்பாலியை மலையாள சினிமாவில் அறிமுகப்படுத்திய வினீத் சீனிவாசன் இயக்கிய படம் இது... இளமை துள்ளலுடன் அருமையான கதையம்சமும் கொண்ட இந்தப்படமும் நூறு நாட்களை தாண்டி ஓடி மிகப்பெரிய வெற்றியும் பெற்றது..
ஆனால் அதன்பிறகு கடந்த ஏழு மாதங்களாக நிவின்பாலி நடிப்பில் அடுத்த படம் வெளியாகவில்லை என்பது மட்டுமே ரசிகர்களின் வருத்தம்.. தனது ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காகத்தான் இந்த இடைவெளியை ஏற்படுத்திக்கொண்டு நல்ல படங்களை தரும் முனைப்பில் பயணித்து வருகிறார் நிவின்பாலி.. இந்த வருடம் மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்துள்ள நிவின்பாலி, தமிழிலும் கௌதம் ராமச்சந்திரன் என்பவர் இயக்கத்தில் ஒரு படம் நடித்துள்ளார். அடுத்தடுத்து இரண்டு தமிழ்ப்படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். ஆக இந்த 2016ஆம் ஆண்டு நிவின்பாலிக்கு உற்சாகமான ஆண்டாகவே அமைந்திருக்கிறது என்று தாராளமாக சொல்லலாம்.