ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வடிவேலுவுடன் பகவதி, அன்பு, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, குருஷேத்ரம், பாசப்பறவைகள், பேத்தி சொல்லைத் தட்டாதே, கம்பீரம், தில்லாலங்கடி, வாத்தியார், ஜில்லுன்னு ஒரு காதல், சுறா, எலி என பல படங்களில் காமெடியனாக நடித்தவர் டெலிபோன் ராஜ். இவர் தற்போது வடிவேலு நடித்துள்ள கத்திச்சண்டை படத்திலும் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.
அதுபற்றி டெலிபோன் ராஜ் கூறும்போது... கத்திச்சண்டை படத்தில் வடிவேலு மனோதத்துவ டாக்டராக நடித்திருக்கிறார். விஷால் மெமரிலாஸ் ஏற்பட்டு அவரிடம் சிகிச்சைக்காக வந்திருப்பார். அவரை ஒரு குதிரை மேல் உட்கார வைத்தால், குதிரை போற வேகத்தில் ஞாபகம் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லி, எனது குதிரையில் ஏற்றி விடுவார். ஆனால் போன குதிரை அப்படியே போய் விடும். இவர்களெல்லாம் குதிரையை காணாமல் தேடிக்கொண்டிருப்பார்கள். அப்போது எனது குதிரையை தேடிக்கொண்டு நான் அங்கே வருவேன். அப்போதுதான் எனக்கு விசயம் தெரியவரும். அதையடுத்து என் குதிரைக்கும் மெமரிலாஸ் இருக்கிற விசயத்தை வடிவேலுவிடம் சொல்லுவேன். அவர் அதிர்ச்சியாகி விடுவார்.
அதோடு வடிவேலுவைப் பார்த்து, ஏய் ரெட்டை ஜடைக்காரா, என் குதிரை மட்டும் கிடைக்கல, உன் ஜடை ரெண்டையும் அறுத்து சடைக்கு சடங்கு வச்சிருவேன் என்று திட்டுவேன். அந்த சீன் ரொம்ப அருமையாக வந்துள்ளது. டைரக்டர் சுராஜ் சார் ஒரு காமெடி கிங். அதனால் அவர் படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. அது இப்போது வடிவேலு சார் மூலமாக நிறை வேறியிருக்கிறது.
மேலும், கத்திச்சண்டை படத்தின் முதல்நாள் படப்பிடிப்பின்போது மதியம் மூன்றரை மணி வரை படப்பிடிப்பு நடந்தது. பிரேக்கூட விடவில்லை. ஆனால் வடிவேலு அதைப்பற்றி கவலைப்படாமல், எங்களுக்கு காட்சியை சொல்லிக்கொடுத்து பிரஷ்ஷாக நின்று கொண்டிருந்தார். அந்த அளவுக்கு ரொம்ப கடுமையாக உழைத்தார். வடிவேலுவினால் எத்தனையோ காமெடி நடிகர்கள் வளர்ந்துள்ளார். அவர்களில் நானும் ஒருவன். என்னை அவருக்கு ரொம்ப பிடிக்கும். இதே டைரக்டர் சுராஜிடம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசியில் நடித்துக்கொண்டிருந்தபோதே, இவன் நல்ல நடிகன். யூஸ் பண்ணிக்கோங்க என்று சொன்னார். அந்த மாதிரி தன்னுடன் நடிக்கும் மற்ற காமெடியன்களை என்கரேஜ் பண்ணுவதில் வடிவேலுக்கு நிகர் யாருமில்லை என்கிறார் நடிகர் டெலிபோன் ராஜ்.