சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் ராணுவத்தில் இருந்ததில்லை. ஆனால் ராணுவத்திற்கு பெருமைசேர்க்கும் விதமாக நிறைய ராணுவப்படங்களில் நடித்திருக்கிறார். அதனால் மோகன்லாலுக்கு சில வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு அவருக்கு கௌரவ ராணுவ கர்னல் பதவியை வழங்கி கௌரவப்படுத்தியது. இதனால் மோகன்லாலும் அவ்வப்போது ராணுவம் மற்றும் அரசு சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்துகொண்டு வந்தார். இந்தியாவில் வேறெந்த நடிகருக்கும் இந்த கெளரவம் கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
மோகன்லால் இதுநாள் வரை இந்தப்பதவியை பயன்படுத்தி முறைகேடாக எதுவும் செய்ததில்லை... அனால் அவரது வீட்டில் யானைத்தந்தங்கள் வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டபோது, இந்த கர்னல் பதவியை அவரிடமிருந்து திரும்ப் பெற வேண்டும் என்கிற கோஷம் சிலரிடம் எழுந்தது.. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லலை.. தற்போது மீண்டும் அதெ பிரச்சனை தலை தூக்கியுள்ளது வேறு ஒரு காரணத்தை முன்னிட்டு.
அதாவது கடந்த 2011ஆம் ஆண்டு மோகன்லால் கேரளா அரசின் சுற்றுலா துறைக்காக ஒரு விளம்பரத்தில் நடித்துக்கொடுத்தார்.. இதற்காக அவருக்கு 50 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாம். இந்த விளம்பரத்தில் அவர் 1971 ராணுவ வீரர் போல யூனிபார்ம் அணிந்து நடித்திருந்தார். ஆனால் தற்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ள ராணுவ கர்னலுக்கான மெடல்களை அதிகப்படியாக அணிந்து நடித்துள்ளார் என்றும், இது ராணுவ மரியாதையை அவமதிப்பதாகவும், அந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் கூறி முன்னாள் பிரிகேடியர் குற்றம் சாட்டியுள்ளதோடு மோகன்லாலுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த கர்னல் பதவியை ராணுவம் அவரிடம் இருந்து திரும்பப்பெற வேண்டும் என புகார் தொடுத்துள்ளாராம்.