பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் ராணுவத்தில் இருந்ததில்லை. ஆனால் ராணுவத்திற்கு பெருமைசேர்க்கும் விதமாக நிறைய ராணுவப்படங்களில் நடித்திருக்கிறார். அதனால் மோகன்லாலுக்கு சில வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு அவருக்கு கௌரவ ராணுவ கர்னல் பதவியை வழங்கி கௌரவப்படுத்தியது. இதனால் மோகன்லாலும் அவ்வப்போது ராணுவம் மற்றும் அரசு சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்துகொண்டு வந்தார். இந்தியாவில் வேறெந்த நடிகருக்கும் இந்த கெளரவம் கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
மோகன்லால் இதுநாள் வரை இந்தப்பதவியை பயன்படுத்தி முறைகேடாக எதுவும் செய்ததில்லை... அனால் அவரது வீட்டில் யானைத்தந்தங்கள் வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டபோது, இந்த கர்னல் பதவியை அவரிடமிருந்து திரும்ப் பெற வேண்டும் என்கிற கோஷம் சிலரிடம் எழுந்தது.. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லலை.. தற்போது மீண்டும் அதெ பிரச்சனை தலை தூக்கியுள்ளது வேறு ஒரு காரணத்தை முன்னிட்டு.
அதாவது கடந்த 2011ஆம் ஆண்டு மோகன்லால் கேரளா அரசின் சுற்றுலா துறைக்காக ஒரு விளம்பரத்தில் நடித்துக்கொடுத்தார்.. இதற்காக அவருக்கு 50 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாம். இந்த விளம்பரத்தில் அவர் 1971 ராணுவ வீரர் போல யூனிபார்ம் அணிந்து நடித்திருந்தார். ஆனால் தற்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ள ராணுவ கர்னலுக்கான மெடல்களை அதிகப்படியாக அணிந்து நடித்துள்ளார் என்றும், இது ராணுவ மரியாதையை அவமதிப்பதாகவும், அந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் கூறி முன்னாள் பிரிகேடியர் குற்றம் சாட்டியுள்ளதோடு மோகன்லாலுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த கர்னல் பதவியை ராணுவம் அவரிடம் இருந்து திரும்பப்பெற வேண்டும் என புகார் தொடுத்துள்ளாராம்.