ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள சினிமாவின் மோஸ்ட் வான்டட் கதாசிரியாக மாறிவிட்டார் உதயகிருஷ்ணா.. 'புலி முருகன்' என்கிற ஒரே படம் இவரது வேல்யூவை ஓஹோவென உயரத்தில் கொண்டுபோய் வைத்துவிட்டது. தமிழில் இரட்டை எழுத்தாளர்களான சுபா (சுரேஷ்-பாலா) பிரபலமான கதாசிரியர்களாக இருப்பது போல மலையாளத்தில் சிபி கே.தாமஸ்-உதயகிருஷ்ணா ஜோடியும் ரொம்பவே பாப்புலரானதுதான். சுமார் 29 படங்களில் இணைந்து கதை எழுதியுள்ள இந்த ஹிட் கூட்டணி, மோகன்லாலின் 'ட்வென்டி 20', 'கிறிஸ்டியன் பிரதர்ஸ்', 'கிலுக்கம் கிலுகிலுக்கம்' உள்ளிட்ட பல படங்களை வெற்றிப்படமாக்கியுள்ளது..
இந்த கூட்டணியில் இருந்து தனியாக வெளியே வந்த உதயகிருஷ்ணா முதன்முதலாக கதை எழுதிய படம் தான் மோகன்லால் நடிப்பில் வெளியாகி, 130 கோடிகளை தாண்டி வசூலில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் 'புலி முருகன்'.. மலையாள சினிமாவின் தரத்தையும், பிசினஸ் வேல்யூவையும் விரிவாக்கியதில் கதாசிரியர் உதயகிருஷ்ணாவுக்கும் மிக முக்கிய பங்கு இருக்கிறது.. இதனால் அவரை கௌரவிக்கும் விதமாக மலையாள இயக்குனர்கள் சங்கம் உதயகிருஷ்ணாவுக்கு பாராட்டு விழா நடத்தியுள்ளது. மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரும், இயக்குனர் சங்க செயலாளருமான இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் தான் இந்த விழாவை முன்னின்று நடத்தியுள்ளார்.