பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மலையாள சினிமாவின் மோஸ்ட் வான்டட் கதாசிரியாக மாறிவிட்டார் உதயகிருஷ்ணா.. 'புலி முருகன்' என்கிற ஒரே படம் இவரது வேல்யூவை ஓஹோவென உயரத்தில் கொண்டுபோய் வைத்துவிட்டது. தமிழில் இரட்டை எழுத்தாளர்களான சுபா (சுரேஷ்-பாலா) பிரபலமான கதாசிரியர்களாக இருப்பது போல மலையாளத்தில் சிபி கே.தாமஸ்-உதயகிருஷ்ணா ஜோடியும் ரொம்பவே பாப்புலரானதுதான். சுமார் 29 படங்களில் இணைந்து கதை எழுதியுள்ள இந்த ஹிட் கூட்டணி, மோகன்லாலின் 'ட்வென்டி 20', 'கிறிஸ்டியன் பிரதர்ஸ்', 'கிலுக்கம் கிலுகிலுக்கம்' உள்ளிட்ட பல படங்களை வெற்றிப்படமாக்கியுள்ளது..
இந்த கூட்டணியில் இருந்து தனியாக வெளியே வந்த உதயகிருஷ்ணா முதன்முதலாக கதை எழுதிய படம் தான் மோகன்லால் நடிப்பில் வெளியாகி, 130 கோடிகளை தாண்டி வசூலில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் 'புலி முருகன்'.. மலையாள சினிமாவின் தரத்தையும், பிசினஸ் வேல்யூவையும் விரிவாக்கியதில் கதாசிரியர் உதயகிருஷ்ணாவுக்கும் மிக முக்கிய பங்கு இருக்கிறது.. இதனால் அவரை கௌரவிக்கும் விதமாக மலையாள இயக்குனர்கள் சங்கம் உதயகிருஷ்ணாவுக்கு பாராட்டு விழா நடத்தியுள்ளது. மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரும், இயக்குனர் சங்க செயலாளருமான இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் தான் இந்த விழாவை முன்னின்று நடத்தியுள்ளார்.