'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
டோலிவுட்டின் யங் டைகர் ஜூனியர் என்.டி.ஆர், ஜனதா கேரேஜ் படத்தின் வெற்றிக்கு பின்னர் தனது சகோதரரும் நடிகருமான கல்யாண் ராமின் சொந்த தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் நடிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. இப்படத்தை இயக்க இயக்குனர்கள் வம்சி, பூரி ஜெகன்நாத் போன்ற பெயர்கள் அடிபட்ட நிலையில், தற்போது இயக்குனர் பாபி, ஜூனியர் என்.டி.ஆரின் 27வது படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை கல்யாண் ராம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஜூனியர் என்.டி.ஆரின் 27வது படத்தை இயக்குனர் பாபி இயக்கத்தில் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தான் தயாரிக்கவுள்ளதாக கல்யாண் ராம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஐ.எஸ்.எம் படத்தில் நடித்த கல்யாண் ராம் அப்படத்தைத் தொடர்ந்து தயாரிப்பு பணிகளில் இறங்கிவிட்டார். பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் வெளிவந்த சர்தார் கபார் சிங் திரைப்படத்தை இயக்குனர் பாபி அண்மையில் இயக்கினார். அப்படத்திற்கு பின்னர் ஜூனியர் என்.டி.ஆருக்காக மீண்டும் ஆக்ஷன் கதையை பாபி தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.