டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 21வது சர்வதேச திரைப்பட விழா, நேற்று இரவு கோலாகலமாக துவங்கியது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, நடிகர் சோ ஆகியோருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்தியாவில், மாநில அரசு நடத்தும் ஒரே சர்வதேச திரைப்பட விழா, திருவனந்தபுரத்தில் ஆண்டு தோறும் நடக்கிறது. இதில், உலக அளவில் விருதுகள் பெற்ற பல திரைப்படங்கள் திரையிடப்படும். கோவாவிற்கு அடுத்து, திருவனந்தபுரம் திரைப்பட விழாவில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்வர். இந்த ஆண்டிற்கான விழா நேற்று கேரள பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. முதல்வர் பினராயி விஜயன் பாரம்பரிய விளக்கை ஏற்றி விழாவை துவக்கி வைத்தார்.
இந்தி நடிகர் அமோல் பலேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். செக் குடியரசின் திரைப்பட இயக்குனர் ஜெர்ரி மன்சிலுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சசி தரூர் எம்.பி., அமைச்சர்கள் தாமஸ் ஐசக், ஏ.கே.பாலன், இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன், நடிகை ஷீலா, நடிகர் மது கலந்து கொண்டனர்.
டிச., 16 வரை 62 நாடுகளை சேர்ந்த, 184 திரைப்படங்கள் 14 இடங்களில் 490 காட்சிகளாக திரையிடப்படுகிறது. வெளிநாடுகளை சேர்ந்த திரை உலக பிரபலங்கள் நடுவர்களாக இருந்து, விருதுக்கான படங்களை தேர்வு செய்வர். சிறந்த படத்திற்கு தங்க காகம் விருது வழங்கப்படும்.இது பிளாஸ்டிக் இல்லா திரைப்பட விழா என அறிவிக்கப்பட்டது. முற்றிலும் பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்கள் பயன்படுத்தாமல் அனைத்து நிகழ்ச்சிகளையும், கேரள அரசு நடத்தவுள்ளது.