பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி |
ஒரு நடிகருக்கு இப்படியும் ரசிகர்கள் இருப்பார்களா என நீங்கள் வியந்தால் அது சிரஞ்சீவியின் ரசிகர்களைப் பார்த்துதான் வியக்க வேண்டும். தமிழில் ரஜினிகாந்தைக் கொண்டாடுவதை விட, தெலுங்கில் சிரஞ்சீவியை பல ஆண்டு காலமாக அதிகமாகவே கொண்டாடி வருகிறார்கள் அவரது ரசிகர்கள். சில வருடங்களுக்கு முன்பு அரசியல் ஆசை வந்து தனிக் கட்சி ஆரம்பித்து, தேர்தலில் போட்டியிட்டு, எம்.பி.யாகத் தேர்வாகி, மத்திய மந்திரியாகவும் அமர்ந்து, அதன் பின் அரசியலே வேண்டாமென ஒதுங்கிவிட்டார் சிரஞ்சீவி. ரஜினி ரசிகர்களுக்கு அவர் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்பதை இப்போதாவது புரிந்து கொண்டால் சரி.
கடந்த 10 வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த சிரஞ்சீவி மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்தார். பலரிடம் கதை கேட்டும் பிடிக்காமல் கடைசியில் தமிழில் விஜய் நடித்து வெளிவந்த 'கத்தி' படத்தை 'கைதி நம்பர் 150' என்ற பெயரில் ரீமேக் செய்து முடித்துவிட்டார்.
நேற்று இந்தப் படத்தின் டீசர் வெளியானது. சிரஞ்சீவி ரசிகர்கள் முதல் கொண்டு திரையுலகினர் வரை அனைவரும் 'பாஸ் இஸ் பேக்' எனக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். டீசரும் 1 மில்லியனைத் தாண்டி சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. சிரஞ்சீவி மகன் ராம் சரண் நடித்து இன்று வெளியான 'துருவா' படத்திற்கு அமோகமான வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் 'கைதி நம்பர் 150' டீசருக்கும் ரசிகர்கள் அமோக ஆதரவு கொடுத்துள்ளதால் சிரஞ்சீவி குடும்பத்தினர் டபுள் சந்தோஷத்தில் உள்ளனராம்.