படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

ஒரு நடிகருக்கு இப்படியும் ரசிகர்கள் இருப்பார்களா என நீங்கள் வியந்தால் அது சிரஞ்சீவியின் ரசிகர்களைப் பார்த்துதான் வியக்க வேண்டும். தமிழில் ரஜினிகாந்தைக் கொண்டாடுவதை விட, தெலுங்கில் சிரஞ்சீவியை பல ஆண்டு காலமாக அதிகமாகவே கொண்டாடி வருகிறார்கள் அவரது ரசிகர்கள். சில வருடங்களுக்கு முன்பு அரசியல் ஆசை வந்து தனிக் கட்சி ஆரம்பித்து, தேர்தலில் போட்டியிட்டு, எம்.பி.யாகத் தேர்வாகி, மத்திய மந்திரியாகவும் அமர்ந்து, அதன் பின் அரசியலே வேண்டாமென ஒதுங்கிவிட்டார் சிரஞ்சீவி. ரஜினி ரசிகர்களுக்கு அவர் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்பதை இப்போதாவது புரிந்து கொண்டால் சரி.
கடந்த 10 வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த சிரஞ்சீவி மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்தார். பலரிடம் கதை கேட்டும் பிடிக்காமல் கடைசியில் தமிழில் விஜய் நடித்து வெளிவந்த 'கத்தி' படத்தை 'கைதி நம்பர் 150' என்ற பெயரில் ரீமேக் செய்து முடித்துவிட்டார்.
நேற்று இந்தப் படத்தின் டீசர் வெளியானது. சிரஞ்சீவி ரசிகர்கள் முதல் கொண்டு திரையுலகினர் வரை அனைவரும் 'பாஸ் இஸ் பேக்' எனக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். டீசரும் 1 மில்லியனைத் தாண்டி சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. சிரஞ்சீவி மகன் ராம் சரண் நடித்து இன்று வெளியான 'துருவா' படத்திற்கு அமோகமான வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் 'கைதி நம்பர் 150' டீசருக்கும் ரசிகர்கள் அமோக ஆதரவு கொடுத்துள்ளதால் சிரஞ்சீவி குடும்பத்தினர் டபுள் சந்தோஷத்தில் உள்ளனராம்.