விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
கடந்த மார்ச் மாதம் 'ட்ராபிக்' பட புகழ் மலையாள இயக்குனர் ராஜேஷ் பிள்ளையின் திடீர் மரணம் மலையாள திரையுலகில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.. அவரது மரணத்திற்கு முதல் நாள் தான் அவர் இயக்கிய 'வேட்ட' படம் ரிலீஸானது. அவர் இந்தியில் இயக்கிய 'ட்ராபிக்' ஏப்ரலில் ரிலீஸானது... ஆக தனது வேலைகளை முடித்துக்கொடுத்துவிட்ட திருப்தியில் தான் அவர் கண்களை மூடியுள்ளார். இருந்தாலும் ராஜேஷ் பிள்ளையின் படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்த குஞ்சாக்கோ போபனை வைத்து ஒரு படம் சொந்தமாக தயாரிக்க வேண்டும் என நினைத்திருந்தாராம் ராஜேஷ் பிள்ளை.
அதனால் அவரது ஆசையை நிறைவேற்றவும் அவரது குடும்பத்திற்கு உதவி செய்யவும் குஞ்சாக்கோ போபன் தீர்மானித்தார். ராஜேஷ் பிள்ளையின் படங்களில் எடிட்டராகவும், அவர் இயக்கிய 'மிலி' படத்தின் கதாசிரியராகவும் பணியாற்றிய மகேஷ் நாராயணன் இயக்கத்தில் தான் நடிக்கும் படத்தில் ராஜேஷ் பிள்ளையின் சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் ஒரு பங்குதாரராக சேர்த்துக்கொள்ள வைத்தார் குஞ்சாக்கோ போபன். பார்வதி கதாநாயகியாகவும், பஹத் பாசில் இன்னொரு நாயகனாகவும் நடித்துள்ள இந்தப்படம் இப்போது 'டேக் ஆப்' என்கிற பெயரில் தயாராகி வருகிறது.