படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

கடந்த மார்ச் மாதம் 'ட்ராபிக்' பட புகழ் மலையாள இயக்குனர் ராஜேஷ் பிள்ளையின் திடீர் மரணம் மலையாள திரையுலகில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.. அவரது மரணத்திற்கு முதல் நாள் தான் அவர் இயக்கிய 'வேட்ட' படம் ரிலீஸானது. அவர் இந்தியில் இயக்கிய 'ட்ராபிக்' ஏப்ரலில் ரிலீஸானது... ஆக தனது வேலைகளை முடித்துக்கொடுத்துவிட்ட திருப்தியில் தான் அவர் கண்களை மூடியுள்ளார். இருந்தாலும் ராஜேஷ் பிள்ளையின் படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்த குஞ்சாக்கோ போபனை வைத்து ஒரு படம் சொந்தமாக தயாரிக்க வேண்டும் என நினைத்திருந்தாராம் ராஜேஷ் பிள்ளை.
அதனால் அவரது ஆசையை நிறைவேற்றவும் அவரது குடும்பத்திற்கு உதவி செய்யவும் குஞ்சாக்கோ போபன் தீர்மானித்தார். ராஜேஷ் பிள்ளையின் படங்களில் எடிட்டராகவும், அவர் இயக்கிய 'மிலி' படத்தின் கதாசிரியராகவும் பணியாற்றிய மகேஷ் நாராயணன் இயக்கத்தில் தான் நடிக்கும் படத்தில் ராஜேஷ் பிள்ளையின் சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் ஒரு பங்குதாரராக சேர்த்துக்கொள்ள வைத்தார் குஞ்சாக்கோ போபன். பார்வதி கதாநாயகியாகவும், பஹத் பாசில் இன்னொரு நாயகனாகவும் நடித்துள்ள இந்தப்படம் இப்போது 'டேக் ஆப்' என்கிற பெயரில் தயாராகி வருகிறது.