படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

சுமார் 20 வருடங்களுக்கு முன் மணிரத்னம் இயக்கத்தில் உருவான படம் தான் இருவர்.. டப்பிங் படங்கள் மூலமாக மட்டுமே தமிழ் ரசிகர்கள் கண்டுகளித்த மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை இந்தப்படத்தில் நடிக்க வைப்பதற்காக முதன்முதலாக தமிழுக்கு அழைத்து வந்தார் மணிரத்னம். மோகன்லாலை இந்தப்படத்தில் நடிக்க வைத்ததற்கு காரணம் இந்தப்படத்தின் கதை தான். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகிய மூவரின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை மையமாக கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.
அரசியல் சம்பந்தப்பட்ட இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்க தமிழ் முன்னணி நடிகர்கள் பலரும் தயங்கினார்கள். அதனாலேயே எம்.ஜி.ஆர் வேடத்திற்கு மோகன்லாலை தேர்வுசெய்தார் மணிரத்னம். ஜெயலலிதா கேரக்டரில் ஐஸ்வர்யா ராயும், கலைஞர் கேரக்டரில் பிரகாஷ்ராஜும் நடித்திருந்தனர்.. படம் விமர்சன ரீதியாக பேசப்பட்ட அளவுக்கு, உலக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட அளவுக்கு, வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.. ஒரு நல்ல படத்தில் நடித்த திருப்தி இருந்தாலும், தமிழில் தான் நடித்த முதல் படம் வெற்றி பெறவில்லையே என்கிற வருத்தம் மோகன்லாலுக்கு நிறையவே இருந்ததாம்.
அந்த சமயத்தில் தான் இந்தப்படத்தை பார்த்துவிட்டு அதில் மோகன்லாலின் நடிப்பு சிறப்பாக இருந்ததாக அவரை தொலைபேசி மூலமாக அழைத்து பாராட்டினாராம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. படத்தில் இடம்பெற்ற ஒரு வாழும் கதாபாத்திரம், அதிலும் ஒரு மாநிலத்தின் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா தன்னை பாராட்டியதால், படம் தோல்வியடைந்த வருத்தம் மோகன்லாலிடம் இருந்து நீங்கியதாம்.