கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
மலையாள நடிகர் திலீப்பை அதிரடியாக மறுமணம் செய்துகொண்ட கையோடு ஹனிமூன் சென்று திரும்பிய காவ்யா மாதவன், சமீபத்தில் தான் தனது திருமணம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து மனம் திறந்துள்ளார். திலீப்பை திருமணம் செய்துகொள்ள தனக்கும் சில நியாயமான காரணங்கள் இருந்தன என்கிறார் காவ்யா மாதவன்.. குறிப்பாக தாங்கள் இருவரும் திருமணம் செய்யவேண்டும் என்பதில் மற்ற யாரையும் விட தங்களது ரசிகர்கள் தான் மிகவும் விருப்பம் கொண்டிருந்தார்கள் என்றும் கூறியுள்ளார் காவ்யா மாதவன்..
இதுநாள் வரை எங்களது மனதில் திருமணம் குறித்த எந்த எண்ணமும் இல்லாத நிலையில் ஊடகங்களும் சோஷியல் மீடியாவில் உள்ள பலரும் தான், அப்படி ஒரு தோற்றத்தை உண்டாக்கிவிட்டனர்.. மீண்டும் ஒரு திருமணம் குறித்து நான் ஆலோசித்தபோது அது எனக்கு உற்ற நண்பராக இருக்கும் திலீப்பாக இருக்க கூடாது என்கிற எண்ணமே சமீபத்தில் தான் வந்தது.. இந்த திருமணமே ஒரு வார காலத்திற்குள் பேசி முடிக்கப்பட்ட ஒன்றுதான்.. இதிலும் கூட ஜாதகம் எல்லாம் பார்த்து தான் நடத்தியுள்ளோம்..” என கூறியுள்ளார் காவ்யா மாதவன்