பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழில் ஜெயம் ரவி நடித்த தனிஒருவன் படத்தின் வாயிலாக கோலிவுட்டிற்கு திரும்பிய அரவிந்த் சாமிக்கு அப்படம் திருப்புமுனையாக அமைந்தது. தனிஒருவன், படத்தில் வில்லத்தனமான ஹீரோவாக மிரட்டிய அரவிந்த் சாமி தனிஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான துருவா படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் ராம் சரண் நாயகனாக நடிக்கும் துருவா திரைப்படம் இன்று(டிசம்பர் 8) ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் திரைக்கு வந்துள்ளது. ராகுல் ப்ரீத்தி சிங் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கும் துருவா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ராம் சரண், அரவிந்த் சாமியுடன் நடிக்க முதலில் பயந்ததாகவும், தன்னுடன் இயல்பாக பழகிய அரவிந்த் சாமி, தனது பயத்தைப் போக்கி தன்னை நெருங்கிய நண்பராக ஏற்றுக் கொண்டதாகவும் ராம் சரண் கூறியுள்ளார். ப்ரூஸ் லீ படத்தின் தோல்வியால் துவண்டிருந்த தனக்கு தனி ஒருவன் புதிய உற்சாகம் கொடுத்து தெலுங்கில் ரீமேக் செய்ய தூண்டியதாகக் கூறியுள்ள ராம் சரண் இப்படம் தெலுங்கிலும் நிச்சய வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.