கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
தமிழில் ஜெயம் ரவி நடித்த தனிஒருவன் படத்தின் வாயிலாக கோலிவுட்டிற்கு திரும்பிய அரவிந்த் சாமிக்கு அப்படம் திருப்புமுனையாக அமைந்தது. தனிஒருவன், படத்தில் வில்லத்தனமான ஹீரோவாக மிரட்டிய அரவிந்த் சாமி தனிஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான துருவா படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் ராம் சரண் நாயகனாக நடிக்கும் துருவா திரைப்படம் இன்று(டிசம்பர் 8) ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் திரைக்கு வந்துள்ளது. ராகுல் ப்ரீத்தி சிங் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கும் துருவா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ராம் சரண், அரவிந்த் சாமியுடன் நடிக்க முதலில் பயந்ததாகவும், தன்னுடன் இயல்பாக பழகிய அரவிந்த் சாமி, தனது பயத்தைப் போக்கி தன்னை நெருங்கிய நண்பராக ஏற்றுக் கொண்டதாகவும் ராம் சரண் கூறியுள்ளார். ப்ரூஸ் லீ படத்தின் தோல்வியால் துவண்டிருந்த தனக்கு தனி ஒருவன் புதிய உற்சாகம் கொடுத்து தெலுங்கில் ரீமேக் செய்ய தூண்டியதாகக் கூறியுள்ள ராம் சரண் இப்படம் தெலுங்கிலும் நிச்சய வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.