டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஜய் நடித்த கத்தி படத்தை அடுத்து அகிரா இந்தி படத்தை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ், தற்போது மகேஷ்பாபு நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராகுல்ப்ரீத்சிங், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்து வருகின்றனர். துப்பாக்கி படத்தை போன்று ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்திற்கு முதலில் வாஸ்கோடகாமா என்று டைட்டில் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன.
ஆனால், பின்னர் அந்த செய்தியை மறுத்தார் முருகதாஸ். அதையடுத்து டைட்டீலை பிறகு அறிவிக்கிறேன் என்று சொல்லிவிட்டு படப்பிடிப்பில் இறங்கினார். தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், அந்த படத்திற்கு ஏஜென்ட் சிவா என்ற தலைப்பை வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி வெளியானதை அடுத்து, அதற்கு மறுப்பு சொல்லாத ஏ.ஆர்.முருகதாஸ், படத்தின் தலைப்பு இன்னும் பரிசீலனையில்தான் உள்ளது என்று கூறியுள்ளார். இருப்பினும், இந்த தலைப்பைதான் அவர் உறுதி செய்து வைத்திருப்பதாக அப்படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.