ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்த வருட ஆரம்பத்தில் வெளியான 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்வதில் ரொம்பவே நிதானம் காட்டுகிறார் பஹத் பாசில்.. அதனால் தான் வருடத்திற்கு ஆறு படங்களை ரிலீஸ் செய்துவந்த பஹத் பாசில் இந்த வருடம் இதுநாள் வரை ஒரே ஒரு படத்தை மட்டுமே கொடுத்துள்ளார். தற்போது அவர் விஸ்வரூபம் படத்தின் எடிட்டராக பணியாற்றிய மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார்.. இதுநாள்வரை பெயரிடப்படாமல் படப்பிடிப்பு நடைபெற்று வந்த இந்தப்படத்திற்கு தற்போது 'டேக் ஆஃப்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது..
போர்க்காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்த மலையாள நர்ஸ்கள் எதிர்கொண்ட இன்னல்களையும் நெருக்கடி நிலையையும் பிரதானப்படுத்தி இவரது படம் தயாராகிறதாம். இந்தப்படத்தில் கதாநாயகனாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார். நர்ஸ் வேடத்தில் பார்வதி நடிக்கிறார் இவர்களுக்கு இணையான வேடத்தில் தான் பஹத் பாசிலும் நடிக்கிறார் குஞ்சாக்கோ போபனும் பஹத் பாசிலும் இணைந்து நடிப்பது இதுதான் முதன்முறை. பாலிவுட் நடிகரான பிரகாஷ் பெலவாடியும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறாராம். அதுமட்டுமல்ல, தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் உள்ள மிகச்சிறந்த நடிகர்கள் சிலரும் இந்தப்படத்தில் நடிக்கிறார்களாம்.