ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தரணி இயக்கத்தில் உருவாகி வந்த "ஒஸ்தி" படத்தை ஒரேயடியாக முடித்தேவிட்டாராம் சிம்பு. ஆனால் அதற்குமுன் இதே எஸ்.டி.ஆர். அலைஸ் சிம்பு நடித்து இன்னும் ஒரு வாரமே சூட்டிங் பாக்கி இருக்கும் "போடா போடி" படத்தை முடிக்காமல் அப்படியே போட்டு வைத்திருக்கிறாராம் மனிதர்! காரணம் "ஒஸ்தி" பட அதிபர் சிம்புவுக்கு தேவையான சவுகரியங்கள் அனைத்தையும் அவரை கேட்காமலேயே செய்து கொடுத்ததுதான் மேட்டர்... அதாகப்பட்டது, 60நாட்கள் ஒஸ்தி படப்பிடிப்பு மைசூரில் நடந்திருக்கிறது. அப்பொழுது சிம்பு தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே உள்ள கிரவுண்டில், சிம்பு கிரிக்கெட் விளையாட ஜெனரேட்டர் வைத்து பவர்ஃபுல் லைட்டுகளை போட்டு கொடுத்து, உடன் விளையாட ஆட்களையும் ரெடி செய்து கொடுத்ததுதான் சிம்புவிடம் சீக்கிரம் வேலை வாங்க உதவியிருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் கேம்ஸ் விளையாடுவது, கிரிக்கெட் விளையாடுவது என குழந்தை மாதிரியாம் சிம்பு! அடக்கடவுளே!!