ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த மூன்று நாட்களாக மலையாள திரையுலகத்தை மட்டுமல்லாது கேரளாவையே ட்ரெண்டிங்கில் வைத்தது திலீப்-காவ்யா மாதவனின் அதிரடி திருமணம். திலீப்பின் முன்னாள் மனைவியும், நடிகையுமான மஞ்சு வாரியர் இந்த திருமணம் குறித்து என சொல்லப்போகிறார் என்பதைத்தான் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.. ஆனால் புயலுக்குப்பின் நிலவும் அமைதிபோல உடனடியாக எந்தவித ரியாக்சனும் காட்டாத மஞ்சு வாரியர், நேற்று முன்தினம் மறைந்த க்யூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தனது பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டிருந்தார்.
என்னாடா இது, தனது முன்னாள் கணவரின் மறுமணம் குறித்து எந்த கருத்தும் சொல்லாமல், அட்லீஸ்ட் அதை கண்டுகொள்ள கூட இல்லாமல் மஞ்சு வாரியர் இப்படி, பிடல் காஸ்ட்ரோ பற்றி கருத்து சொல்லி இருக்கிறாரே என்றுதான் மேலோட்டமாக பார்க்கும் பலரும் நினைப்பார்கள்.. ஆனால் அவர் பதிவிட்டுள்ள வாக்கியங்களை கவனித்து பார்த்தால் அது திலீப் மறுமணம் குறித்த தனது மறைமுக பதிலாகவே அவர் கூறியுள்ளார் என்பது விளங்கும்.. அப்படி என்ன கூறியுள்ளார் மஞ்சு வாரியர்..?
அவர் கூறியுள்ளதாவது... பிடல் காஸ்ட்ரோ உலகெங்கும் உள்ள போராளிகளுக்கு ஒரு உந்து சக்தியாக இருந்தார். அவர் நம்பிய உண்மைக்கும் நீதிக்கும் அவர் தனியாகவே போராடினார். பெரும்பாலானோர் அவருக்கு எதிராக இருந்தாலும், அவரை நம்பியவர்கள் மட்டும் அவருக்கு எப்போதும் உறுதுணையாக இருந்தனர். அவர் தன்னை எதிர்த்த வலுவான எதிரிகளை, தான் கொண்ட உறுதியான கொள்கைகளாலும் தத்துவங்களாலும் எதிர்த்து வெற்றிபெற்றார்” என இப்படி நீள்கிறது அவரது பதிவு.. இதன்மூலம் பிடல் காஸ்ட்ரோ போல தானும் திலீப் விஷயத்தில் உறுதியான முடிவு எடுத்ததாகவே சொல்லவருகிறார் மஞ்சுவாரியர் என்றே தோன்றுகிறது. அவரை பற்றி நன்கு அறிந்தவர்களும், அவர் திலீப்பின் மறுமணத்திற்கு இந்தவிதமாக பதிலடி தந்துள்ளார் என்றே கூறுகிறார்கள்.