ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கறுப்பு பண ஒழிப்பின் ஒரு பகுதியாக சமீபத்தில் பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கை ஒருபக்கம் வரவேற்பு பெற்றாலும், முறையாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்படாததால் பொதுமக்கள் பணம் எடுக்க சிரமப்பட்டு வருவதையும் பார்க்க முடிகிறது.. திரையுலகம் சார்ந்தவர்கள் பலரும் இந்த நடவடிக்கையை ஆதரித்து கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.. ஆனால் மலையாள நடிகர் சங்க தலைவரும், தற்போதைய நாடாளுமன்ற எம்.பியுமான நடிகர் இன்னொசன்ட் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார். இத்தனைக்கும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆதரவுடன் ஜெயித்தவர்தான் இன்னொசன்ட்.. ஆனால் இப்போது அவர்தான் மோடியின் நடவடிக்கையை விமர்சித்துள்ளார்..
“இந்த நடவடிக்கையை எடுத்தது தவறென்று சொல்லவில்லை.. ஆனால் இதை அமல்படுத்துவதற்கு முன்பு சாரதாரண மக்கள் சிரமத்திற்கு ஆளாகாத விதமாக பிரதமரும் மத்திய அரசும் கொஞ்சம் மூளைக்கு வேலைகொடுத்து மாற்று ஏற்பாடுகளை உருவாக்கி இருக்கலாம். மக்கள் அவர்கள் பணத்தை எடுப்பதற்கே வரிசையில் நிற்பது என்ன ஒரு கொடுமை..?, ஒரு சிலர் இந்த நடவடிக்கையால் பாதிப்புக்குள்ளாகி மரணத்தை தழுவுகிறார்களே இதற்கு யார் பொறுப்பு ஏற்பது..? பிரதமரின் அம்மா வரிசையில் நின்று பணம் எடுத்ததாக புகைப்படம் வெளியானது.. ஆனால் அவர் வரிசையில் நிற்காவிட்டாலும் கூட அவருக்கு எப்படியோ பணம் போய் சேர்ந்துவிடும்.. ஆனால் சாதாரண ஜனங்களுக்கு அப்படியா..?” என கொந்தளித்துள்ளார் இன்னொசன்ட்.