சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
தமிழ்நாட்டில் எப்படி ரஜினியோ, ஆந்திராவில் சிரஞ்சீவி. தெலுங்குத் திரையுலகில் நீண்ட காலமாக நம்பர் 1 இடத்தில் இருக்கும் நடிகர். 'மெகா ஸ்டார்' என ரசிகர்களால் அன்போது அழைக்கப்படும் சிரஞ்சீவி ஒரு காலத்தில் சென்னையில் வசித்த போது, ஆந்திராவில் இருக்கும் ரசிகர்கள் திருப்பதிக்கு வரும் போதெல்லாம் சென்னையில் உள்ள சிரஞ்சீவியின் வீட்டிற்கு வந்து அவரைப் பார்க்காமல் போக மாட்டார்கள். அப்படி ஒரு ரசிகர்கள் அவருக்கு இன்றும் இருக்கிறார்கள்.
சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் நடித்துள்ள 'துருவா' படத்தை டிசம்பர் மாதம் 9ம் தேதி வெளியிட உள்ளார்கள். தமிழில் வெளிவந்த 'தனி ஒருவன்' படத்தின் ரீமேக்தான் 'துருவா'. தன் மகன் ராம் சரண் நடித்துள்ள இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும் என சிரஞ்சீவி பல விஷயங்களைச் செய்து வருகிறார். இந்தப் படம் மூலம் ராம் சரணின் மார்க்கெட்டை மிகப் பெரிய அளவில் வளர்க்க அவர் முடிவு செய்துள்ளார். தன் தம்பி பவன் கல்யாணைச் சமாளிக்க அவருக்கு ராம் சரணின் வளர்ச்சி பெரிதும் தேவைப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் சூர்யா நடித்துள்ள 'எஸ் 3' படம் டிசம்பர் 16ம் தேதி வெளிவந்தால் அது தன் மகன் ராம் சரணின் 'துருவா' படத்தின் வசூலைப் பாதிக்கும் என நினைத்து படத்தை தள்ளி வைக்கும்படி சூர்யாவிடம் பேசச் சொல்லியிருக்கிறார். 'எஸ் 3' படத்தைத் தயாரித்துள்ள ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் சிரஞ்சீவியின் உறவினரான அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கும் படத்தைத் தயாரிக்க உள்ளது. அல்லு அர்ஜுனே இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் பேசினாராம்.
ஆனால், 'எஸ் 3' படத்தைத் தள்ளி வைக்க முடியாது என சூர்யா தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்களாம். ஒரே நாளில் படம் தமிழிலும், தெலுங்கிலும் வரவில்லை என்றால் தங்களுக்கு பாதிப்பாக இருக்கும், மேலும் அனைத்து வினியோகஸ்தர்களிடமும் டிசம்பர் 16ம் தேதி 'எஸ் 3' கண்டிப்பாக வெளிவரும் என்று சொல்லியாகிவிட்டது என வெளியீட்டைத் தள்ளி வைக்க மறுத்துள்ளார்கள்.
சிரஞ்சீவி தரப்பிலிருந்து கேட்டுக் கொண்டும் 'எஸ் 3' படத்தைத் தள்ளி வைக்காமல் இருக்கிறார்களே என டோலிவுட்டில் இதுதான் இப்போதைக்கு 'ஹாட் டாபிக்' ஆகப் போய்க் கொண்டிருக்கிறதாம்.
சீறுகிற சிங்கம் கிட்ட சிரஞ்சீவியாவது...சரணாவது...