ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மகளின் திருமணம் 560 கோடி ரூபாய் செலவில் பெங்களூருவில் பிரமாண்டமாக நடந்தது. இதில் திரைப்பட நட்சத்திரங்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். நடிகை ராகுல் ப்ரீத்தி சிங்கின் நடன நிகழ்ச்சியும் நடந்தது.
நாட்டு மக்கள் 500க்கும், ஆயிரத்திற்கும் அலைந்து கொண்டிருக்கும்போது ஜனார்த்தன ரெட்டியால் 560 கோடி செலவில் எப்படி திருமணம் நடத்த முடிந்தது என்று புகார்கள் எழுந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் ஜனார்த்தன ரெட்டியின் வீடு, அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அதில் அவர்கள் திருமண செலவு விபரத்தை பார்வையிட்டார்கள். அதில் திருமணத்தில் நடனமாடிய ரகுல் ப்ரீத்தி சிங்கிற்கு 1 கோடி சம்பளம் வழங்கப்பட்டிருப்பது தெரிந்தது. இந்த 1 கோடியை ராகுல் ப்ரீத்தி சிங் தனது வருமானத்தில் காட்டவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து விளக்கம் அளிக்கமாறு ராகுல் ப்ரீத்தி சிங்கிற்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. "எங்களுக்கு எந்த நோட்டீசும் இதுவரை வரவில்லை. எல்லாமே வதந்தி" என்று ராகுல் ப்ரீத்தி தரப்பில் கூறுகிறார்கள்.