ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக தொழில் கற்றுக்கொண்டு, மும்பையில் செட்டிலான இயக்குனர் பிஜாய் நம்பியார், விக்ரம்-ஜீவா நடித்த டவுட் மூலம் தமிழில் கால் பதித்தார். தற்போது அவரது சொந்த ஊரான. மலையாளத்தில் என்ட்ரி கொடுக்க அவர் தீர்மானித்தபோது அவருக்கும் அவரது கதைக்கும் பொருத்தமாக இருந்த துல்கர் சல்மானையே ஒப்பந்தம் செய்து 'சோலோ' என டைட்டிலும் வைத்து பூஜை போட்டுவிட்டார். இந்தப்படத்தில் இதுவரை பார்க்காத துல்கர் சல்மானை காட்ட இருக்கிறாராம் பிஜாய் நம்பியார்.
தமிழ், மலையாளம் என இருமொழிகளில் உருவாக இருக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கொச்சி, மும்பை, லடாக் ஆகிய பகுதிகளில் மூன்று கட்டமாக நடைபெறுகிறது. தற்போது கொச்சி பகுதியில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்தப்படத்தின் கதாநாயகியாக மாடல் அழகி ஆர்த்தி வெங்கடேஷ் என்பவர் நடித்து வருகிறார்.. இவர் நிறைய விளம்பரங்களில் மாடலாக நடித்துள்ளவர் என்றாலும் சினிமாவில் இதுதான் அவருக்கு முதல் என்ட்ரி. சமீபத்தில் இவரும் துல்கர் சல்மானும் சைக்கிளிங் போவது போன்ற புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி உள்ளது.