ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்தியத் திரையுலகில் ஹிந்தித் திரைப்பட இயக்குனர்கள் அல்லாமல் இரண்டு தென்னிந்திய இயக்குனர்கள் பேசப்பட்டு வருகிறார்கள். அவர்களில் தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த ஷங்கர், தெலுங்குத் திரையுலகத்தைச் சேர்ந்த ராஜமௌலி முக்கியமானவர்கள். ஷங்கர் அவருடைய முந்தைய படங்கள் மூலமாக ஏற்கெனவே பேசப்படும் ஒரு இயக்குனராக இருக்கிறார். 'பாகுபலி' படம் வெளிவந்த பிறகு ராஜமௌலியும் அதிகம் பேசப்பட்டு வருகிறார்.
ஹிந்தித் திரைப்படங்களுக்குப் போட்டியாக 'பாகுபலி' படம் சுமார் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான 'பாகுபலி' அந்த மொழியில் மட்டும் 100 கோடி ரூபாயை வசூலித்தது. இப்போது 'பாகுபலி 2' படத்தை ராஜமெலியும், '2.0' படத்தை ஷங்கரும் இயக்கி வருகிறார்கள். 'பாகுபலி 2' படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட உள்ளார்கள். ஒருவேளை அதே சமயத்தில் '2.0' படமும் வெளிவந்தால் என்ன ஆவது என 'பாகுபலி' குழுவினருக்குக் கொஞ்சம் கலக்கம் இருந்தது. ஆனால், நேற்று '2.0' படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்குத்தான் வெளியிடப் போகிறார்கள் என்ற அறிவிப்பு பாகுபலி குழுவினருக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது.
ஏனென்றால் 'பாகுபலி' படத்தை விட இரண்டு மடங்கு பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது 2.0'. மேலும், ரஜினிகாந்த், அக்ஷய்குமார் இருவரும் படத்தின் நாயகர்களாக இருப்பதால் இந்திய அளவில் மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. '2.0' படத்தின் முதல் பார்வைக்கு ராஜமௌலியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். “இரண்டு செல்வச்செழிப்புடன் மாஸ்டர் வருகிறார். அடுத்த ஆண்டு தீபாவளி இன்னும் சத்தமாக இருக்கப் போகிறது. காத்திருக்க முடியவில்லை...' என அவர் வாழ்த்தியுள்ளார்.