ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரீ-என்ட்ரியில் கடல், தனி ஒருவன் படங்களுக்குப்பிறகு போகன் படத்தில் நடித்து வந்த அரவிந்த்சாமி, தற்போது சதுரங்கவேட்டை-2 படத்தில் திரிஷாவுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படங்களில் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மாதிரியான மாறுபட்ட வேடங்களில் நடித்து வரும் அரவிந்த்சாமி, அடுத்தபடியாக செல்வா இயக்கும் புதிய படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். க்ரைம் கதையில் உருவாகும் அப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 16-ந்தேதி சென்னையில் தொடங்குகிறது.
ஏற்கனவே, தலைவாசல், அமராவதி, கர்ணா, நான் அவனில்லை உள்பட சுமார் 20 படங்களை இயக்கியுள்ள செல்வா, இந்த படத்தை நான் அவனில்லை பாணியில் 5 கதாநாயகிகள் கதையில் இயக்குகிறார். அந்த வகையில், இனியா ஒப்பந்தம் செய்யப்பட்ட விட்ட நிலையில, மற்ற நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த 5 நாயகிகளில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடிப்பது யார் என்பது சஸ்பென்சாம். அதோடு, வழக்கமான கதைகளில் இருந்து மாறுபட்ட கதை வடிவத்தில் இப்படம் உருவாகிறதாம். இந்த க்ரைம் கதையை கேட்ட அடுத்த நிமிடமே ஓகே சொல்லிவிட்டாராம் அரவிந்த்சாமி