ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி மூலமாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வேண்டுமானால் பப்ளிசிட்டி தேவைப்பட்டிருக்கலாமே தவிர, பிரபல நடிகைகளான ஊர்வசிக்கோ, கீதாவுக்கோ, அல்லது குஷ்புவுக்கோ நிச்சயம் அப்படி ஒரு பப்ளிசிட்டி தேவையும் இல்லை.. தேடி அலைய வேண்டிய நிலையிலும் அவர்கள் இல்லை.. ஆனால் அவர்களை வைத்து நிகழ்ச்சி நடத்தும் சேனல்களுக்கு டி.ஆர்.பி ரேட்டிங்கை ஏற்ற சீப் பப்ளிசிட்டி தேவையாக இருக்கிறது.. லட்சுமி ராமகிருஷ்ணன் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சிகளால் சர்ச்சையில் சிக்கியது அப்படித்தான்.. ஆனால் தெலுங்கில் இதேபோன்ற நிகழ்சி ஒன்றை நடத்திவரும் நடிகை கீதாவும் கூட கடந்த வாரம் சர்ச்சையில் சிக்கினார்..
அவர் நடத்திவரும் நிகழ்ச்சியில் பங்குபெற வந்திருந்த ஒரு இளம்பெண்ணையும், திருநங்கையாக மாறிய ஆணையும் அவர் அநாகரிகமான வார்த்தைகளால் திட்டியது பார்வையாளர்களிடம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இதுகுறித்து ஏராளமான கண்டனங்கள் கீதாவுக்கு குவிந்தன. இந்த சர்ச்சை ஓய்வதற்குள் அடுத்ததாக நடிகை ஊர்வசியும் இதேபோன்ற காரணத்திற்காக கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார். மலையாள சேனல் ஒன்றில் 'ஜீவிதம் சாட்சி' என்கிற நிகழ்ச்சியை நடத்திவரும் ஊர்வசி, அதில் பங்குபெற வந்த குடும்பத்தில் இருந்த ஒரு சில ஆண்களை மிகவும் தரக்குறைவாக திட்டியதாக தெரியவந்துள்ளது.. இதுபற்றிய புகார் கிடைத்ததை தொடர்ந்து மனித உரிமை கழகம் சம்பந்தப்பட்ட சேனலின் நிர்வாகிக்கு விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது