ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் - வைரமுத்து கூட்டணி 'ரோஜா' படத்திலிருந்து 'ஓ காதல் கண்மணி' வரை எத்தனையோ படங்களில் இணைந்திருக்கிறது. இந்தக் கூட்டணி இணைந்தாலே படத்தின் மொத்தப் பாடல்களும் சூப்பர் ஹிட் வரிசையில் சேர்ந்துவிடும். அதை ஒவ்வொரு படமும் தொடர்ந்து நிரூபித்து வருகின்றன. இப்போது 'காற்று வெளியிடை' படத்திற்காக இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்திற்காக நேற்று ஐந்தாவது பாடலை எழுதியது குறித்து வைரமுத்து தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
“காற்று வெளியிடை' படத்தின் ஐந்தாம் பாடல் நேற்று நிறைவுற்றது. மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் என்ற கனிந்த கலைஞர்களோடு தொழிற்படுவது ஒரு தனி சுகம். நேற்று மாலை 4 மணிக்குக் கூடினோம், 6 மணிக்கு மெட்டு இறுதியானது, 8 மணிக்குப் பாட்டு உறுதியானது, இரவு 12 மணிக்கு ஒலிப்பதிவு நிறைந்தது. என்ன லயம் ! என்ன நயம் ! பிரிவின் வலி சொல்லும் நினைவின் பாடல் அது. ஒரு வரி சொல்லட்டுமா ?
“அன்பே நான் அலைபோல
எழுந்தாலும் வீழ்ந்தாலும்
உன்பேரைக் கூவுகிறேன்...”, என வைரமுத்து நேற்றைய பாடல் பதிவு அனுபவத்தைப் பகிரிந்துள்ளார்.
'காற்று வெளியிடை' படத்தின் இரண்டு போஸ்டர் டிசைன்களைப் பார்க்கும் போதே அது ஒரு காதல் படம் என புரிய வைக்கிறது. மணிரத்னம், ரகுமான், வைரமுத்து கூட்டணி திகட்டத் திகட்ட மீண்டும் காதல் பாடல்களை அளிக்கப் போகிறது என்பது மட்டும் புரிகிறது.