ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கன்னட நடிகர் துனியா விஜய் எப்போதும் பரபரப்புக்கு பெயர் போனவர். மனைவி அளித்த புகாரின் பேரில் பல முறை கைது செய்யப்பட்டவர். தற்போது அவர் மஸ்திகுடி என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இரண்டு சண்டை கலைஞர்கள் ஏரியில் மூழ்கி இறந்ததால் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.
தயாரிப்பாளர் சுரேஷின் தம்பி சங்கர்.பி கவுடா என்பவருக்கும், சுரேசுக்கும் சொத்து பிரச்சினை இருந்துள்ளது. இதில் நடிகர் துனியா விஜய் பஞ்சாயத்து பேசியுள்ளார். அவர் தயாரிப்பாளர் சுரேசுக்கு ஆதரவாக பேசியுள்ளார். பஞ்சாயத்தில் சுரேசின் தம்பி சங்கர் பி.கவுடா அவரது மனைவி மானஷா, மானஷாவின் தந்தை ஜெயராம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். பஞ்சாயத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த துனியா விஜய், மானஷாவின் தந்தை ஜெயராமை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜெயராம் அளித்த புகாரின் பேரில் துனியா விஜய்யை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.