ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விந்தை, கமரக்கட்டு ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் மனீஷாஜித். இப்போது திமில், அப்பாத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சரத்குமார் நடித்த கம்பீரம் உள்பட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் கதாநாயகியான இவர், இதுவரை மனீஷாஜித் என்ற பெயரில் நடித்து வந்தார். ஆனால் இனிமேல் ரஹானா என்ற பெயரில் நடிக்கப் போவதாக சொல்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இதுவரை நான் நடித்துள்ள படங்களில் எனக்கு நல்ல பெயரே கிடைத்துள்ளது. எனது நடிப்பு இயல்பாக இருந்ததாக சினிமா நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் சொன்னதை கேட்டு ரொம்ப சந்தோசப்பட்டேன். அதேசமயம், அடுத்தடுத்து நடிக்கும் படங்களில் இன்னும் அழுத்தமான பர்பாமென்ஸைக் கொடுத்து நடிக்க வேண்டும் என்பதற்காக நிறைய கதைகள் கேட்டு அதில் நல்லதை மட்டுமே செலக்ட் பண்ணி நடித்து வருகிறேன்.
அந்த வகையில், தற்போது திமில் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறேன். அங்காடித்தெரு மகேஷ் இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார். எஸ்.காதர் இயக்கியுள்ள இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம். எமோசனலான காட்சிகள் நிறைய உள்ளது. இந்த படத்தின் கதையை கேட்டபோதே, இது என்னை அடுத்த லெவலுக்கு எடுத்துக்செல்லும் படமாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டேன். அதோடு, டைரக்டரும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்ததால், கதையில் அதிக இன்வால்வ்மெண்டோடு நடித்தேன். ஸ்பாட்டிலேயே என் நடிப்புக்கு பலத்த கைதட்டல் கிடைத்தது. அதற்கு நான் திமில் பட டைரக்டர் காதருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
அதையடுத்து இப்போது அப்பாத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க என்ற படத்தில் நடிக்கிறேன். இந்த படத்தில் எனது தாத்தாவாக சாருஹாசனும், பாட்டியாக ஷீலாவும் நடிக்கிறார்கள். அவர்களின் பேத்தியாக நான் நடிக்கிறேன். அதோடு இரண்டு வேடங்களில் நடிக்கிறேன். கிராமம், நகரம் என இரண்டு வேடங்களில் வித்தியாசம் காட்டி நடித்து வருகிறேன். காமெடி கலந்த இந்த படமும் எனக்கு முக்கியமான படம்தான். நடித்து வரும் இந்த இரண்டு படங்களுக்கு பிறகு என்னால் எந்த மாதிரியான கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியும் என்கிற நம்பிக்கை டைரக்டர்களுக்கு ஏற்படும். அதனால்தான் இந்த படங்கள் திரைக்கு வந்த பிறகு புதிய படங்களில் ஒப்பந்தமாக முடிவு செய்திருக்கிறேன்.
மேலும், இதுவரை நான் கிளாமராக நடித்ததில்லை. ஆனால் கதைக்கு அவசியம் என்கிறபோது ரசிக்கும் வகையிலான கிளாமரை வெளிப்படுத்தி நடிப்பேன். இந்த நேரத்தில் எனது பெயரை ரஹானா என்று மாற்றியிருக்கிறேன். மனீஷா ஜித் என்பது எனது நிஜப்பெயர். சினிமாவில் நடிக்கும் பெரும்பாலானவர்கள் நிஜ பெயரை தவிர்த்து வேறு பெயரிலேயே நடிப்பதால் நானும் எனது பெயரை மாற்றியிருக்கிறேன். இனிமேல் ரஹானா என்றே படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்கிறார்.