ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகத்தில் தற்போது புதிய படங்களுக்கு பெயர் வைக்காமல் படத்தை ஆரம்பிப்பதுதான் ஃபேஷன் ஆக மாறி வருகிறது. அந்த அற்புத வேலை அஜித் படங்களில் இருந்துதான் ஆரம்பமானது. அவர் நடித்து கடைசியாக வந்த சில படங்களை பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பை ஆரம்பித்து நடத்தினார்கள். அதன்பின் அதற்கென்று ஒரு பரபரப்பை ஏற்படுத்தி படத்தின் பெயரை அறிவித்தார்கள். இந்த நடைமுறையை தற்போது பலரும் ஆரம்பித்துவிட்டார்கள். பெரிய படம் என்றால் பெயர் அறிவிக்கக் கூடாது என நினைக்கிறார்களா என்றும் தெரியவில்லை.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு தமிழில் அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே நடந்து வருகிறது. ஆனாலும், படத்திற்கு இன்னும் பெயர் வைக்காமலே இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் தயாராவதால் இரண்டு மொழிகளுக்கும் பொருத்தமான ஒரு பெயரைத் தேடி வருகிறார்களாம். இதனிடையே, இந்தப் படத்திற்கு இரண்டு பெயர்களைத் தேர்வு செய்து வைத்துள்ளார்கள் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'ஏஜன்ட் சிவா, அபிமன்யு' ஆகிய இரண்டு பெயர்களில் ஒன்றை இந்தப் படத்திற்கு வைக்கலாம் என்கிறார்கள். ரசிகர்களை குழப்புவதற்காக இப்படித் தேர்வு செய்துள்ளார்களா அல்லது இந்த இரண்டையும் விடுத்து வேறு ஒரு புதிய பெயரை அறிவிப்பார்களா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
தீபாவளி தினத்தன்று இப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்படும் போது படத்தின் பெயரும் வந்துதானே ஆக வேண்டும்.