ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான பிரேமம் தெலுங்கிலும் அதே பெயருடன் ரீமேக் செய்யப்பட்டு, சூப்பர் ஹிட் அடித்துள்ளது. தெலுங்கில் நாக சைதன்யா நாயகனாக நடிக்க அவருடன் அனுபமா பரமேஷ்வரன், ஷ்ருதிஹாசன், மடோனா செபஸ்டியன் என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். இயக்குனர் சண்டூ மொண்டேட்டி இயக்கிய இப்படம் ரூ 21 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இவ்வெற்றியை நேற்று(அக் 19) மாலை படக்குழுவினர் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். நாகசைதன்யாவின் தந்தை நாகார்ஜூனா இவ்விழாவில் கலந்து கொண்டு படக்குழுவினரை பாராட்டினார்.
விழாவில் பேசிய நாகார்ஜூனா, “பிரேமம் படத்தை பார்த்தவுடனே தெரிந்துவிட்டது இப்படம் தெலுங்கிலும் நிச்சய வெற்றி பெறும் என்று, இதனால் அப்போதே இயக்குனரை அழைத்து பாராட்டி விட்டேன். இப்படத்தின் இறுதிகாட்சிகள் எனது கண்ணில் கண்ணீரை வர செய்தன. இயக்குனர் சண்டூ டோலிவுட் ரசிகர்களின் ரசனைக்கேற்ப இப்படத்தை உருவாக்கியுள்ளார். எனது கீதாஞ்சலி படத்தின் வெற்றியைப் போல் நாகசைதன்யாவின் பிரேமம் படத்தின் வெற்றியைப் பார்க்கின்றேன். நாகசைதன்யா இப்படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மகனின் வெற்றியை விட தந்தைக்கு வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும் எனும் பிரேமம் பட வசனமே இத்தருணத்திற்கு பொருத்தமானது” என கூறினார்.
நாகசைதன்யா கூறுகையில், இயக்குனர் சண்டூ தனக்கு மிக பெரும் வெற்றி படத்தைக் கொடுத்துள்ளார். இதற்காக அவருக்கு முதலில் நன்றி கூற விரும்புவதாக தெரிவித்தார். தொடர்ந்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த நாகசைதன்யா, தங்களின் குறிக்கோளுக்கு ஏற்ப மலையாள பிரேமம் படத்தின் தரத்தை குறைத்து விடாமல், தெலுங்கில் அப்படத்தைக் கொடுத்துள்ளதாக விமர்சனங்கள் கிடைத்துள்ளதே இப்படத்தின் பெரிய வெற்றி என்று நாகசைதன்யா கூறினார்.