விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
மோகன்லாலின் மகன் ப்ரணவ் நடிக்க வருவாரா இல்லை டைரக்சன் பண்ணப்போவாரா என காசை சுண்டிப்போட்டு பூவா தலையா பந்தயம் கட்டி சிலர் காத்திருக்க, அவரோ ஹீரோவாகவே தனது பாதையை தேர்ந்தெடுத்துளார்.. அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்துவது அவரது தந்தைக்கு 'த்ரிஷ்யம்' என்கிற பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த ஜீத்து ஜோசப் தான். இத்தனைக்கும் அவர் ப்ரணவிற்கு கடந்த சில வருடங்களாக உதவி இயக்குனராக சேர்த்துக்கொண்டு டைரக்சன் சொல்லித்தந்த குருநாதரும் கூட..
பின் ப்ரணவ் இயக்குனராக மாறாமல் ஹீரோவாக மாறியதன் பின்னணியில் மோகன்லாலின் தூண்டுதல் எதுவும் இருக்குமோ என்கிற சந்தேகம் பலருக்கும் இருந்தது.. அதற்கேற்றவாறு சில தினங்களுக்கு முன் 'புலி முருகன்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு வந்த மோகன்லாலிடம் இந்த சந்தேகத்தை கேட்டேவிட்டார் மோகன்லாலை பேட்டியெடுத்த சக நடிகரான முகேஷ்..
ஆனால் மோகன்லாலோ, பிரணவிற்கு எது வேண்டும் வேண்டாம் என தீர்மானிக்கிற வயது இருக்கிறது.. அவர் சிறந்த அறிவாளி.. அவர் முடிவை அவர்தான் எடுத்துள்ளார். அவர் ஹீரோ ஆவதற்கான ஐடியாவையோ, அல்லது நடிப்பதற்கான சிறப்பு அட்வைஸ்களையோ தான் தரவில்லை என்றும் கூறினார்.. தன்னிடமிருந்து ஏதாவது தெரிந்துகொள்ள விரும்பினால் ப்ரணவ் அப்போது தன்னை தேடிவருவதில் தயக்கம் காட்ட மாட்டார் என்றும் மகனை புகழ்ந்துள்ளார் மோகன்லால்.