ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மோகன்லால் நடிப்பில் கடந்த 7-ந்தேதி வெளியான மலையாள படம் புலிமுருகன். திரையிட்ட அனைத்து சென்டர்களிலும் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தை கேரள ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். புலிமுருகன் படங்கள் ஓடும் முக்கிய தியேட்டர்களுக்கு முன்பு மோகன்லாலின் பிர மாண்ட கட்அவுட்கள் வைத்து பாலாபிஷேகம் நடத்தி வருகின்றனர். அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடுவதால் டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் திரும்பிச் சென்று கொண்டிருக்கிறார்களாம்.
இந்த நிலையில், நேற்று கேரளாவில் முக்கிய நகரங்களில் புலிமுருகன் படம் ஓடும் தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்ததாம். அப்போது ஒரு தியேட்டரில் போலீஸ்காரர் ஒருவரே டிக்கெட் இல்லாமல் திரும்பிச்சென்று கொண்டிருந்த ரசிகர்களிடம் பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்தாராம். இதை கவனித்த ரசிகர்கள் அதை படமெடுத்து இணைய தளங்களில் வெளியிட்டுள்ளனர். இப்போது அந்த போட்டோ வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.