ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜில்லா, துப்பாக்கி படங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் நடிப்பதற்காக கடும் முயற்சி எடுத்து வந்தார் காஜல்அகர்வால். ஆனால், அவரால் மறுபடியும் விஜய்யை நெருங்க முடியவில்லை. இதனால், தமிழில் தனது மார்க்கெட் சரிந்து விடுமோ என்று அவர் எண்ணிக் கொண்டிருந்த நேரம்தான், அஜீத்தின் 57வது படவாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் கமிட்டாவதற்கு முன்பு விக்ரமுடன் கருடா படத்தில்தான் காஜல் நடிப்பதாக இருந்தார். ஆனால், அந்த படம் கைவிடப்பட்டதால் அந்த கால்சீட்டை அஜீத் படத்துக்கு கொடுத்தார். இதற்கிடையே ஜீவாவுடன் கவலை வேண்டாம் படத்திலும் நடித்துள்ளார் காஜல்அகர்வால்.
இந்நிலையில், தற்போது அஜீத்துடன் நடித்து வரும் காஜல்அகர்வால், டுவிட்ட ரில் நேற்று ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அப்போது அஜீத்து டன் நடித்த அனுபவம் குறித்து ரசிகர்கள் கேட்டபோது, படப்பிடிப்பு தளத்தில் நடிக்கும்போதும், படப்பிடிப்புக்கு வெளியேயும் அவர் ஒரு ஜென்டில்மேன் என்று கூறியுள்ளார். ஏற்கனவே அஜீத்துடன் நடித்த அனுஷ்கா, தமன்னா, லட்சுமிமேனன் என பல நடிகைகளும் அஜீத்தை ஒரு சிறந்த மனிதர், அனை வரையும் மதிக்கக்கூடியவர், ஜென்டில்மேன் என்று புகழாரம் சூட்டியது குறிப்பிடத்தக்கது.