ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ் மற்றும் நாகார்ஜூனா நால்வரும் தெலுங்கு திரை உலகின் நான்கு பெரும் நூண்கள் என்றே கூறலாம். நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிரஞ்சீவி கைதி நம்பர் 150 படத்தின் வாயிலாக திரை உலகிற்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். தமிழில் ஹிட் அடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான கைதி நம்பர் 150 படத்தை இயக்குனர் விவி விநாயக் இயக்குகின்றார். இப்படம் 2017 பொங்கலுக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேப்போல் பாலகிருஷ்ணா நடிக்கும் அவரது 100வது திரைப்படமான கௌதமிபுத்ர சடர்கனி படத்தை தேசிய விருது வென்ற கஞ்சே படத்தை இயக்கிய க்ரிஷ் இயக்குகின்றார். இப்படமும் 2017 பொங்கலுக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு படங்களில் கைதி நம்பர் 150 படத்தின் விநியோக உரிமை அதிக விலைக்கு பேசப்படுகின்றதாம். ஆனால் ஒன்பது வருட இடைவெளிக்கு பின்னர் சிரஞ்சீவி நடிப்பதால் அவருக்கான இமேஜ் அப்படியே இருக்கின்றதா என விநியோகஸ்தர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளதால், விநியோகஸ்தர்கள் அப்படத்தை அதிக விலைக்கு வாங்க தயக்கம் காட்டுகின்றனராம்.
ஆனால் பாலகிருஷ்ணாவின் கௌதமிபுத்ர சடர்கனி படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டுகின்றனராம். காரணம் பாலகிருஷ்ணாவின் முந்தைய படங்கள் வெற்றி பெற்றுள்ளதாலும் சரித்திர பின்னணியில் கௌதமிபுத்ர சடர்கனி திரைப்படம் உருவாவதாலும் பாலகிருஷ்ணா படத்திற்கே விநியோகஸ்தர்கள் மத்தியில் மவுசு ஏற்பட்டுள்ளதாக டோலிவுட் வட்டார தகவல்கள் கூறுகின்றன.