விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
ஜோதிகா, சிம்ரனுக்குப்பிறகு மும்பையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த சில நடிகைகளில் தமன்னா குறிப்பிடத்தக்கவர். கேடி படத்தில் இலியானாவுடன் இணைந்து அறிமுகமான இவர், அதன்பிறகு கல்லூரி, வியாபாரி என நடித்து குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாகி விட்டார். அதோடு பர்பாமென்ஸ்ரீதியாக பெரிய அளவில் புகழ்பெறவில்லை என்றாலும், இளசுகளை சுண்டியிழுக் கும் கிளாமரை வெளிப்படுத்தி மார்க்கெட்டை இப்போதுவரை ஸ்டெடி பண்ணி வைத்துள்ளார் தமன்னா. இந்த நிலையில், தற்போது விஜய் இயக்கத்தில் பிரபு தேவாவுடன் நடித்துள்ள தேவி படத்தில் லீடு ரோலில் நடித்துள்ள தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
இதுபற்றி தமன்னா கூறுகையில், மும்பை பெண்ணான என்னை ஒரு நடிகையாக அங்கீகரித்தது தமிழ் சினிமாதான். அதன்பிறகுதான் மற்ற மொழிகளில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதோடு பின்னர் எனது தாய்மொழியான இந்திக்கு சென்று நடித்தபோது அங்கு எனக்கு வெற்றி கிடைக்கவில்லை. மறுபடியும் தமிழில் வீரம் படம் மூலம் எனது மார்க்கெட் சூடுபிடித்தது. பின்னர் பாகுபலியிலும் பெயர் வாங்கினேன். இப்போது தேவி படம். இது என் கேரியரில் மைல்கல் படமாகும். இந்த வாய்ப்பும் தமிழ் டைரக்டர் விஜய்தான் கொடுத்துள்ளார். ஆக தமிழ் சினிமாதான் என்னை திரையுலகில் மேன்மேலும் வளர்த்துக்கொண்டேயிருக்கிறது என்கிறார் தமன்னா.