ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒருசில நடிகைகளுக்கே தான் கதாநாயகியாக நடித்த முதல் படத்தில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் ரீச்சாகும் பாக்கியம் கிடைக்கும்.. அந்தவகையில் வினீத் சீனிவாசன் தங்கையாக ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா என்கிற படத்தில் நடித்தாலும் அதில் கவனிக்கப்படாமல் போன அபர்ணா பாலமுரளி, மகேஷிண்டே பிரதிகாரம் படத்தில் பஹத் பாசிலின் கதாநாயகியாக நடித்து ஒரே படத்தில் அனைவரையும் கவர்ந்துவிட்டார்.. ஒப்பம் படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருந்த மோகன்லால், அவரை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வரவழைத்து வாழ்த்தியதோடு, அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் அவரை அறிமுகப்படுத்தி வைக்கும் அளவுக்கு ஸ்டார்கள் மனதிலும் இடம்பிடித்து விட்டார்..
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஒரு முத்தச்சி கதா படத்திலும் இவரது நடிப்பு பாரட்டப்பட்டு வருகிறது. அபர்ணா பாலமுரளி சினிமாவுக்கு வருவதற்கு முன்பே, அதாவது பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்திலேயே நடிகர் விக்ரமின் தீவிர ரசிகை.. ஆனால் தான் நடிகையாவேன் என்று நம்பியதை விட, என்றாவது ஒருநாள் விக்ரமை சந்திப்பேன் என்று உறுதியாக நம்பினாராம். அந்த வாய்ப்பும் சமீபத்தில் வெளிநாட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அபர்ணாவுக்கு கிடைத்து விட்டது.. அந்த விழாவில் கலந்துகொள்ள விக்ரம், குஷ்பூ ஆகியோர் வந்திருந்தனர்..
அப்போது குஷ்புவிடம் பேசிய அபர்ணா, தான் விக்ரமின் தீவிர ரசிகை என்றும், அவரது எந்த புகைப்படத்தை தன்னிடம் காட்டினாலும் அது எந்தப்படத்தில் எந்த காட்சியில் அவர் நடித்தது என தன்னால் உடனே சொல்ல முடியும் என கூற குஷ்பூவுக்கு ஆச்சர்யம்.. இந்த தகவலை அவர் விக்ரமிடம் சொல்ல, அவரும் அபர்ணாவிடம் தனது மகிழ்ச்சியை தெரிவித்தாராம்.. அந்தவிதமாக விக்ரமை சந்தித்து அவருடன் போட்டோ எடுக்கும் ஆசையை நிறைவேற்றிக்கொண்ட அபர்ணா பாலமுரளியின் அடுத்த இலக்கு விக்ரமுடன் ஒரு படத்தில் ஒரு சின்ன கேரக்டரிலாவது நடித்துவிடவேண்டும் என்பதுதானாம்.