கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனது 150வது படத்தில் நடித்து வருகின்றார். விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் கைதி நம்பர் 150 என்ற பெயரில் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமாக உருவாகி வருகின்றது. கத்தி படத்தில் சமந்தா நடித்த நாயகி வேடத்தில் தெலுங்கில் காஜல் அகர்வால் நடிக்கின்றார். முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவு பெற்று தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.
இப்படத்தில் நடிப்பது குறித்து நடிகை காஜல் கூறுகையில், சிரஞ்சீவியுடன் முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடிப்பது மிகவும் பெருமையாக இருப்பதாகக் கூறினார். படப்பிடிப்பு தளங்களில் தனக்கான காட்சிகள் முடிந்ததும், பிற நடிகர்கள் போல் கேரவனுக்குள் சென்று ஓய்வெடுக்காமல் மற்ற நடிகர்கள் நடிப்பதைப் பார்க்கும் சிரஞ்சீவி, சிறப்பாக இருப்பின் அவர்களை பாராட்டுவதாகவும் கூறினார். அதே போல் தவறுகளையும் சுட்டிக்காட்டும் சிரஞ்சீவி தனக்கும் நடிப்பில் பல்வேறு அறிவுரைகள் கூறியதாகவும் காஜல் தெரிவித்துள்ளார். இயக்குனர் விவி விநாயக் இயக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார்.