விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனது 150வது படத்தில் நடித்து வருகின்றார். விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் கைதி நம்பர் 150 என்ற பெயரில் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமாக உருவாகி வருகின்றது. கத்தி படத்தில் சமந்தா நடித்த நாயகி வேடத்தில் தெலுங்கில் காஜல் அகர்வால் நடிக்கின்றார். முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவு பெற்று தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.
இப்படத்தில் நடிப்பது குறித்து நடிகை காஜல் கூறுகையில், சிரஞ்சீவியுடன் முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடிப்பது மிகவும் பெருமையாக இருப்பதாகக் கூறினார். படப்பிடிப்பு தளங்களில் தனக்கான காட்சிகள் முடிந்ததும், பிற நடிகர்கள் போல் கேரவனுக்குள் சென்று ஓய்வெடுக்காமல் மற்ற நடிகர்கள் நடிப்பதைப் பார்க்கும் சிரஞ்சீவி, சிறப்பாக இருப்பின் அவர்களை பாராட்டுவதாகவும் கூறினார். அதே போல் தவறுகளையும் சுட்டிக்காட்டும் சிரஞ்சீவி தனக்கும் நடிப்பில் பல்வேறு அறிவுரைகள் கூறியதாகவும் காஜல் தெரிவித்துள்ளார். இயக்குனர் விவி விநாயக் இயக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார்.