ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை த்ரிஷாவுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கியதன் வாயிலாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ராணா, அஜித்துடன் ஆரம்பம், ஆர்யா, பாபி சிம்ஹாவுடன் பெங்களூர் நாட்கள் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். ராஜமௌலியின் பாகுபலி படத்தில் பலதேவ் எனும் வில்லன் வேடத்தில் மிரட்டிய ராணா அப்படத்திற்கு பின்னர் மிகவும் பிரபலமாகிவிட்டார்.
ராணா செய்தியாளர்களை எதிர்கொள்ளும் போது தவறாமல் எதிர்கொள்ளும் கேள்வி, திருமணம் எப்போது என்று தான். அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த ராணாவிடமும் திருமணம் எப்போது என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ராணா, குடும்பதினார் தனது திருமணத்தில் அதிக அவசரம் காட்டுவதாகவும் ஆனால் தான் நிதானமாகவே திருமண பந்தத்தில் இணைய விரும்புவதாகவும் கூறியுள்ளார். கைவசம் பல படங்கள் இருப்பதால் இரண்டு வருடங்களுக்கு பிறகே திருமணம் குறித்து யோசிக்க முடியும் என்றும் ராணா கூறியுள்ளார்.