ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சாதாரணமாக இளம் வயதில் உள்ள நடிகர்கள் சண்டைக்காட்சிகளில் நடிப்பது சுலபம்.. ஆனால் அதற்கே பலர் டூப் போட்டு சமாளிக்கிறார்கள்.. அப்படியானால் மோகன்லால் போன்ற சீனியர் நடிகர்கள் என்ன பண்ணுவார்கள்..? ஆச்சர்யமாக டூப் போடுவதை அறவே வெறுக்கிறார்களாம். குறிப்பாக மோகன்லால் எந்த ரிஸ்க்கான காட்சியிலும் நடிக்க ஒகே சொல்லிவிடுவாராம். இது சாதரணமாக அவர் நடிக்கும் கேரக்டருக்கு.. ஆனால் சமீபத்தில் ஒப்பம் படத்தில் பார்வையற்றவராக இவர் நடித்திருந்த கேரக்டருக்கு சண்டைகாட்சிகளை வடிவமைத்த ஸ்டண்ட் சில்வா மோகன்லாலின் டெடிகேஷனை பார்த்து அசந்துபோய் விட்டாராம்.
கண் தெரியாதவன் எப்படி சண்டை போடுவான் என்கிற கேள்வி ஆடியன்ஸ் மனதில் வந்துவிடக்கூடது என்பதில் சில்வாவை விட மோகன்லால் கவனமாக இருந்தாராம். அதனால் தான் அந்த போலீஸ் ஸ்டேஷன் சண்டைக்காட்சியும், கிளைமாக்ஸில் சமுத்திரக்கனியுடன் மோதும் சண்டைக்காட்சியும் அவ்வளவு தத்ரூபமாக வந்ததாம். அதேபோல ஸ்டண்ட் சில்வா குறிப்பிடும் இன்னொரு விஷயம், இதுவரை தமிழில் அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு சண்டைக்காட்சியை வடிவமைத்திருந்தாலும் மோகன்லால் தான் சண்டைக்காட்சியில் நடிப்பதில் வல்லவர் என்கிறார் சில்வா. அதற்கேற்றவாறு மோகன்லாலின் உடல் இந்த வயதிலும் வளைந்துகொடுப்பது ஆச்சர்யமான ஒன்று என்றும் கூறியுள்ளார் ஸ்டண்ட் சில்வா. இவர் மட்டுமல்ல மோகன்லாலுடன் பணியாற்றிய ஹாலிவுட் சண்டக்கலைஞரே இதைத்தான் சொல்லியிருக்கிறார்.