ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மௌனகுரு என்ற படத்தை அகிரா என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்தார் ஏ.ஆர்.முருகதாஸ். கடந்த வாரம் வெளியான அகிரா எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு பாலிவுட்டில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் மகேஷ் பாபு நடிக்கும் தெலுங்குப் படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் எடுப்பதாக சொல்லி வருகிறார்கள்.
உண்மையில் தெலுங்கில் மட்டுமே இப்படத்தை எடுக்கிறார்கள். அதை தமிழில் டப் செய்ய இருக்கிறார்கள். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கடந்த மாதம் ஹைதராபாத்தில் துவங்கியது. தமிழில் டப் செய்வதால் சில காட்சிகளை சென்னைப் பின்னணியில் எடுக்க உள்ளனர். இதற்காக இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெறவிருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக மகேஷ் பாபு சென்னை வந்துள்ளார்.
இப்படத்திற்காக சென்னை அருகே உள்ள தீம்பார்க்கில் பிரம்மாண்ட செட் ஒன்றை அமைத்துள்ளார்கள். இந்த செட்டில் 20 நாட்கள் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. தொடர்ந்து சென்னையில் சில இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெறுகிறது.